சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருது?- ஆ.ராசாவுக்காக வரிந்துகட்டி இறங்கிய திருமாவளவன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை : உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரம தர்மத்தின்படி சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக எம்.பி ஆ.ராசா, இந்துக்களில் சூத்திரர்கள் பற்றி மனு தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜகவினரும், இந்து அமைப்புகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும், ஆ.ராசா பேச்சைக் கண்டித்திருந்தார். இந்நிலையில், ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து, எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திருமாவளவன்.

ஆ.ராசா - தணியாத சர்ச்சை

ஆ.ராசா - தணியாத சர்ச்சை

சமீபத்தில் சென்னையில் நடந்த திராவிடர் கழக நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான், நீ பஞ்சமன் தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டதகாதவன். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. இன்னும் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாது. இந்து மதம் குறித்து இழிவாகப் பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றனர்.

கொந்தளித்த எச்.ராஜா

கொந்தளித்த எச்.ராஜா

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திமுக எம்பி ஆ.ராசா அநாகரிகமான முறையில் இந்துக்களை விபச்சாரியின் மகன் என்று கூறி வருகிறார். இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஆ.ராசா மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வெகுஜன விரோதியான ஆ.ராசாவை, திமுகவில் இருந்து மு.க.ஸ்டாலின் நீக்க வேண்டும். இது போல் வேறு மதத்தவரை பேசி இருந்தால் ஸ்டாலின் அரசு சும்மா இருக்குமா? உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என கடுமையாகச் சாடியிருந்தார்.

 திருமா பதிலடி

திருமா பதிலடி

இந்நிலையில், ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்த எச்.ராஜாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "ஆ.ராசா மனு தர்மத்திலுள்ள செய்தியை எடுத்து மேற்கோள் காட்டிச் சொன்னார். இந்து என்று ஒப்புக் கொண்டால் சூத்திரன் என்று ஒப்புக்கொள்ள வேண்டி வரும். சூத்திரன் என்று ஒப்புக் கொண்டால் அதற்கு மனு தர்மம் என்ன பொருள் தருகிறதோ அதனை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே நான் இந்து இல்லை என நீ ஏன் சொல்லக் கூடாது என்று சூத்திரர்களை பார்த்து சூத்திரர்களாக இந்த சமூகம் அடையாளப்படுத்தப்படுபவர்களை பார்த்துச் சொன்னார்.

சூத்திரர்களை நோக்கிச் சொன்னார்

சூத்திரர்களை நோக்கிச் சொன்னார்

அது தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொருந்தாது. பிராமணர், சத்திரியர், வைசியர் என்பவர்களுக்கும் பொருந்தாது. இந்து சமூகத்தில் உள்ள நான்காம் வர்ணத்தைச் சார்ந்த சூத்திரர்களை நோக்கி அந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனென்றால் அந்த வர்ணாசிரம தர்மம் வெளிப்படையாக சொல்கிறது, சூத்திரர் என்றால் அப்பன் பெயர் தெரியாதவர்கள், வேசியின் பிள்ளைகள். இதைத்தான் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார்.

உங்களுக்கு ஏன் ஆத்திரம்

உங்களுக்கு ஏன் ஆத்திரம்

லிங்காயத்துக்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை என்று எப்படி துணிச்சலாக சொல்லுகிறார்களோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன் வந்திருக்கிறார்களோ, அப்படி சூத்திரர்களாக இருப்பவர்களும் முன்வர வேண்டும் என்று பெரியார் பேசியதை அம்பேத்கர் பேசியதை அவர் மீண்டும் சொல்லி இருக்கிறார். நானும் அதை பேசி வருகிறேன். ஆனால், இவர்கள் சனாதனிகள் குறிப்பாக சூத்திரர் அல்லாதவர்களுக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. எச்.ராஜா சூத்திரரா? உங்கள் நம்பிக்கையான வர்ணாசிரம தர்மத்தின் படி சூத்திரன் அல்லாத எச்.ராஜாவுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது?" என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+