சாப்பாட்டில எங்கடா கறியை காணோம்.. தகராறு செய்த அக்கா மகனை குத்தி கொன்ற மாமன்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அக்கா மகனை குத்தி கொன்ற மாமன்!-வீடியோ
மதுரை: "டேய்... எங்கடா சாப்பாட்டில கறியை காணோம்" என்று கல்யாண வீட்டில் தகராறு செய்ததால், அக்கா மகனையே கொடூரமாக குத்திக் கொலை செய்தார் தாய் மாமன்!
மதுரை வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி, குரங்குதோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு. கடந்த ஞாயிறு அன்று தனது தாய்மாமன் வீட்டில் நடந்த கல்யாணத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது கல்யாணம் முடிந்து பிரபு சாப்பிட சென்றார். அப்போது அவரது இலையில் கறி பரிமாறப்படவில்லை. "எங்கடா எனக்கு கறி வைக்கல" என்று தகராறில் ஈடுபட்டார்.

இதன்பிறகு அங்கிருந்து கோபித்து கொண்டு கல்யாண வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டார். அருகிலுள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பிரபு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பிரபுவின் மாமா கார்த்திக் அங்கு வந்து பிரபுவை சரமாரியாக வயிற்றில் குத்தி தப்பிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரபுவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். மருமகனை கொன்ற தாய்மாமன் இப்போது எஸ்கேப்.. அதனால் தப்பியோடிய மாமா கார்த்திக்கை வாடிப்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்












Click it and Unblock the Notifications