"தாம்பத்யம்".. கணவர் போல வாழ்ந்துவிட்டு இப்ப டார்ச்சர்.. அந்த மாமா வேற.. மதபோதகர் மீது பெண் புகார்
மதுரை: தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார் என்று கிறிஸ்தவ மத போதகர் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் வண்டியூரை சேர்ந்தவர் வர்ணிகா. இவர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தன்னை போல் இனி வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது. தன்னை ஏமாற்றிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னுடைய மனுவில் அந்த பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.

உல்லாசம்
அந்த மனுவில், "10 வருடங்களுக்கு மேலாக தன்னுடன் நட்பாக பழகி திருமணம் செய்து கொள்வதாக சொல்லி மனைவி போல் வாழ்ந்து வந்தார் கிறிஸ்துவ மத போதகர் சாமுவேல். அவர் தன்னை பலமுறை உல்லாசம் அனுபவித்திருக்கிறார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்.. மனைவி 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து விட்டு இப்போது என்னை ஏமாற்றி விட்டார். இப்போது அந்த மத போதகர் சாமுவேல் சென்னையை சேர்ந்த பிளஸ்சி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

உல்லாசம்
என்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது குறித்து நான் கேட்டபோது, தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். தொலைபேசியில் பேசினால் தகாத வார்த்தைகளில் பேசி திட்டுகிறார். தொடர்ந்து அவரிடம் பேசினால் உல்லாசமாக இருந்தபோது அதை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருக்கிறேன். தொடர்ந்து தொல்லை கொடுத்தால் அந்த படங்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்.

மாமா ஜேம்ஸ்
பல முறை எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். அவர் விருப்பத்திற்கு எல்லாம் இணங்க மறுத்ததால் அடித்துக் கொடுமைப்படுத்தினார். குடும்ப கஷ்டம் என்று சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் பறித்து கொண்டார். அதையும் திருப்பி தர மறுக்கிறார். அந்த பணத்தையாவது கொடுங்கள் என்று கேட்டால் அவரது மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் மணமுடைந்து தற்கொலை முயற்சி செய்தபோது அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள்..

மதபோதகர்
தன்னை போல் இனி வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது. தன்னை ஏமாற்றிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். " என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.. மதபோதகர் மீது அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதனிடையே, மத போதகர் சாமுவேல் தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டு தனியாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறதாகவும் சோஷியல் மீடியாவில் செய்திகளும் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications