Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மடப்புரம் இளைஞர் லாக் அப் மரணம்.. உறவினர்களிடம் விசாரிக்கும் மாஜிஸ்திரேட்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

துரை: சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து சென்ற அஜித் குமார் என்ற இளைஞர் மரணம் அடைந்தது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இளைஞர் அஜித் குமாரின் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மதுரை அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித் குமார். 28 வயதாகும் இவருக்கு, 2 மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி மற்றும் நிக்தா ஆகிய இருவரும் மடப்புரம் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அஜித் குமாரிடம் சாவியை கொடுத்து பார்க்கிங் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

Youngster Ajith Kumar s Death in Sivagangai Police Custody Triggers Magisterial Inquiry

ஆனால் அஜித் குமாருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், வேறொருவரின் உதவியுடன் காரை ஓரமாக பார்க் செய்துள்ளார். இதன்பின் தரிசனம் முடித்து வெளியே வந்த சிவகாமி, நிக்தா இருவரும் காரில் இருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்று கேட்டுள்ளனர். இதன்பின் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவலாளி அஜித் குமாரை போலீசார் விசாரித்துள்ளனர்.

இதன்பின் அஜித் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக காவல் நிலையம் முன்பாக உறவினர்கள் குவிந்திருக்கின்றனர். தொடர்ந்து அஜித் குமார் விசாரிக்கப்பட்ட போது, காவல் நிலையத்தில் இருந்த 6 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அஜித் குமாரின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காவல்துறை விசாரணையின் போது தாக்கியதாலேயே இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+