மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சோகம்! மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்று வருகிறது. ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் காளைகளை அடக்க களமிறக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயங்களுடன் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டார்.
வாடிவாசல் அருகே காளை வெளியேறுவதை ஆர்வமுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாலமுருகனை, அவரது இடது மார்பில் காளையின் கொம்பு குத்தி சீவியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என காலை தொடங்கி தற்போது வரை 75-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டில் காயம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியும், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரும் அவனியாபுரத்தை விட்டு நகரவே இல்லை.
ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர்களில் சிலர் ஆர்வமிகுதியில் காளை சீறிப்பாயும் இடத்திற்குள் சென்றதால் இது போன்ற விபரீதங்கள் ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. இதனிடையே முதல் நாள் ஜல்லிக்கட்டிலேயே பரிதாபமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது.
400 காளைகளை வரை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அவிழ்த்துவிடப்பட்டது. 401-வது காளையை அவிழ்த்துவிடப்பட்ட போது தான் இந்த துரதிர்ஷடவசமான நிகழ்வு நடந்துள்ளது. இதனிடையே பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் இது போன்ற கவனக்குறைபாட்டால் உயிரிழப்புகள் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications