என்னமோ நடக்குது! ஆர்எஸ்எஸ் தலைமைக்கு கால் செய்த நிதின் கட்கரி? பாஜகவில் பூகம்பம்?அப்போ பிரதமர்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறாத நிலையில் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியின் உதவியுடன் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மோடி பிரதமரா? : 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறாத நிலையில் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியின் உதவியுடன் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
1. பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர்.
2. பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
3, இவர்கள் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டும். சமயங்களில் இவர்கள் தங்களுக்கு பிரதமர் பதவியை கூட கேட்கலாம். முக்கியமாக நிதிஷ் பிரதமர் பதவிக்கு ஆசை படலாம்.
( அயோத்தியிலேயே தோல்வி! ம்ம்.. ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல்.. ஜெய் ஜெகன்நாத்துக்கு மாறிய மோடி! இதான் காரணம் )
4. இது முழுக்க முழுக்க மோடியை முன்னிறுத்திய மோடி கேரண்டி தேர்தல். அதில் பாஜக தோற்ற நிலையில் பாஜகவில் மோடியை பிரதமராக்க பாஜக விரும்புமா என்ற கேள்வி உள்ளது. முக்கியமாக ஆர்எஸ்எஸ் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் சில டாப் தலைவர்களுக்கு இடையிலான மோதல் பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏற்பட்டு உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக யோகி ஆதித்யநாத், நிதின் கட்கரி மற்றும் சிலர் பிரதமர் மோடி மீது அப்செட்டில் இருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கியமாக பாஜகவில் மோடி-ஷா மற்றும் நிதின் கட்கரிக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு உள்ளதாக பாஜக தேசிய வட்டாரங்கள் கூறுகின்றன.
அதோடு மோடியை விரும்பாத ஆர்எஸ்எஸ் தீவிர ஆர்எஸ்எஸ் நிர்வாகியான கட்கரியை வளர்த்துவிடுவதற்கான பணிகளையும் செய்கிறதாம். பாஜக பெரும்பான்மை பெறாமல் என்டிஏ ஆட்சி அமைய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதால் கட்கரியை பிரதமராக்கவும் ஆர்எஸ்எஸ் காய் நகர்த்தி வருகிறதாம்.
கட்கரி அரசியல் தாண்டி சிறந்த பிஸ்னஸ் மேன் வேறு. கட்கரி ஆர்எஸ்எஸ்ஸின் "பைனான்ஸ்" தூண் மற்றும் கருவூலமாகவும் இருந்து வருகிறாராம் . அவர் மீதான தாக்குதல் ஆர்எஸ்எஸ்ஸின் பொருளாதாரம் மீதான நேரடித் தாக்குதல் என்று பலர் நம்புகிறார்கள். கட்கரிக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. அவர் பிரதமர் ஆனால் தங்களுக்கு நல்லது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கலாம்.
மோடியை விரும்பாத காரணத்தினாலேயே அவருக்கு தேர்தலில் ஆர்எஸ்எஸ் பெரிதாக வேலை பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவே உத்தர பிரதேசத்தில் பாஜக சறுக்கவும் முக்கிய காரணம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆர்எஸ்எஸ் - நிதின் கட்கரி இணைத்து ஏதாவது திட்டங்களை வகுக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications