மகாராஷ்டிராவில் 'செம்ம வேட்டை'.. பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 12 மாவோயிஸ்டுகள் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான 'வேட்டை'யை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் (நக்சல்கள், நக்சலைட்டுகள்) 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிஷா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, பீகார், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் பழங்குடி மக்களைக் கேடயமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தினர். தற்போது மாவோயிஸ்டுகள் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் நடமாடுகின்றனர்.

தற்போதைய நிலையில் சத்தீஸ்கரில் தலைதூக்கிய மாவோயிஸ்டுகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் மட்டும் கடந்த 7 மாதங்களில் 138 மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு சவாலாக இருப்பது பஸ்தார் பிராந்திய பாதுகாப்புப் படைதான். பஸ்தார் மண்டல ஐஜியாக இருப்பவர் தமிழரான சுந்தரராஜ். இவரது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் மாவோயிஸ்டுகளைத் தேடும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து கடுமையான பதிலடி தரப்பட்டது.
கட்ச்ரோலியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சுமார் 6 மணிநேரத்துக்கும் மேலாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். எஞ்சிய 11 பேர் குறித்த அடையாளங்கள் வெளியாகவில்லை.
சுட்டு வீழ்த்தப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள், எறிகுழல்கள் உள்ளிட்ட 12 அதிநவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படையினர் தரப்பில் சிலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications