கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்
மும்பை: மகாராஷ்டிராவின் புனே பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள டபோடி மற்றும் புகேவாடி பகுதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், புனே நகரின் காலே படல் பகுதியில் 3 பேரும், ஹடாப்சர் பகுதியில் 2 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரை உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். இதில் யோகேஷ் வான்கடே என்பவர் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.

18 பேர் உயரிழப்பு - காரணம் என்ன?
மெத்தனால் அதிகம் கலந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக கைதாகியுள்ள யோகேஷ் வான்கடே மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஸ்பிரிட் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த கள்ளச்சாராயத்தை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதிகளில் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டபோடி, புகேவாடி, ஹடாப்சர் மற்றும் காலே படல் உள்ளிட்ட பகுதிகளில் பலர் இந்த சாராயத்தை அருந்தியுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த சில மணி நேரங்களில் உடல்நிலை மோசமடைந்ததாகவும் சிலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம்
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது பற்றி கூறியதாவது:- இந்த சம்பவம் குறித்து புனே காவல் ஆணையரிடம் பேசினேன். விஷத்தன்மை கொண்ட மதுபானம் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும், சிலர் கைது செய்யப்படுவார்கள். இந்த விவகாரத்தில் மொத்த நெட்வொர்க்கையும் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம். யாரும் தப்ப முடியாது. ஏனெனில், இது கொலை போன்றது" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications