லிவ்இன் உறவு.. 19 வயது பெண், 20 வயது ஆணுடன் லிவ்-இன் உறவில் வாழலாம்.. மும்பை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மும்பை: வேறு வேறு மதத்தை சேர்ந்த 19 வயது பெண்ணும், 20 வயது இளைஞரும் திருமணம் செய்ய முடியாத சூழலில், நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.. மும்பை ஹைகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது, நாட்டு மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 19 வயதாகிறது.. இவர் 20 வயது இளைஞரை தீவிரமாக காதலித்து வந்தார்... இந்த நிலையில் திடீரென ஒருநாள் அந்த பெண், தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இளைஞரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை.

திருமணம்: திருமண வயது 21 என்பதால், இளைஞரால் அப்பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை. அதனால், 21 வயதானதுமே, 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.
ஆனால் இதற்குள், பெண்ணின் பெற்றோர் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார்கள்.. காதலர்கள் 2 பேருமே வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்களாம். எனவே, இதில் சில மத அமைப்புகளும் தலையிட்டு பெண்ணின் பெற்றோருக்கு நெருக்கடி தந்துள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்ததையடுத்து, போலீஸார், காதல் ஜோடியை அழைத்து பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள்.
பெண்கள் முகாம்: அப்போது, இளைஞருக்கு 21 வயது இன்னும் ஆகவில்லை என்பதால், பெண்ணை அவரிடமிருந்து மீட்டு, பெண்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போலீசாரின் இந்த முடிவை இளைஞர் எதிர்த்தார்.. தன்னுடைய காதலியை விடுவிக்க வேண்டும் என்றும், தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும், மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி பாரதி மற்றும் மஞ்சுஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கறார் முடிவு: அவரிடம் நீதிபதிகள் சமாதானம் பேசிப்பார்த்தார்கள். ஆனால், காதலனுக்கு 21 வயதாகும் வரை அவருடனேயே லிவ் இன் முறையில் வாழ விரும்புவதாகவும், தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். இதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட இளைஞரிடமும் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
இறுதியில், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சொல்லும்போது, "இளைஞரும், இளம்பெண்ணும் இணைந்து வாழலாம். இவர்கள் இருவரும் தங்களது துணையை தேர்ந்தெடுக்க சட்டம் கொடுத்திருக்கும் உரிமையில் எங்களால் தலையிட முடியாது. அவர்கள் சேர்ந்து வாழ்வதை சட்டத்தாலும் பிரிக்கவும் முடியாது. அதனால், பெண்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணை அங்கிருந்து விடுதலை செய்ய வேண்டும்..
அதிரடி உத்தரவு: அந்த பெண் தன்னுடைய விருப்பப்படி வாழலாம். இந்த விவகாரத்தின் பெண்ணின் பெற்றோரின் கவலைகளை நாங்கள் உணர்கிறோம்.. ஆனால் அப்பெண்ணின் விருப்பத்தில் எங்களால் தலையிட முடியாது" என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications