அதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா? சிகிச்சை ஆரம்பம்
Recommended Video
மும்பை: சீனா நாட்டில் ஏராளமான மக்களுக்கு கொரானா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து திரும்பிய இரண்டு நபர்கள் மும்பையில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரானா வைரஸ் பாதிப்பு தீவிரமாகியுள்ளதால், மும்பை மாநகராட்சி (பிஎம்சி) சின்ச்போகாலியில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை, இதற்காக, உருவாக்கியுள்ளது.

"கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது" என்று பிஎம்சியின் நிர்வாக சுகாதார அதிகாரி டாக்டர் பத்மஜா கேஸ்கர் இன்று கூறினார்.
சீனாவில் இருந்து திரும்பிய இரண்டு நபர்களிடம், மும்பை ஏர்போர்ட்டில், லேசான இருமல் மற்றும் குளிர் தொடர்பான அறிகுறிகள் இருப்பதை, குடிமை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். எனவே, அவர்கள் கஸ்தூரிபா மருத்துவமனை வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
"சீனாவில் இருந்து திரும்பி வந்த யாருக்காவது கொரானா வைரஸின் அறிகுறிகள் தென்பட்டால், எங்களுக்கு (பிஎம்சி) எச்சரிக்கை தகவல் கொடுக்குமாறு நகரத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்," என்றும் அவர் கூறினார்.
கொரானா வைரஸ் மற்றும் நோயை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மகாராஷ்டிரா அரசிடமிருந்து, கஸ்தூரிபா மருத்துவமனைக்கு, விரிவான அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன, மேலும் அவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் என்பது வைரஸின் மோசமான குடும்பத்தை சேர்ந்தது. இது ஜலதோஷம் முதல் கடுமையான சுவாச நோய்க்குறி வரை அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. WHO அறிக்கையின்படி, கொரோனா வைரஸ், தாக்கினால், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கஷ்டங்கள் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். எனவே மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளவர்கள், சாதாரண ஜலதோச பிரச்சினைக்காகவும் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பரிசோதனைகளுக்கு பிறகு, முழு விவரம் வெளியாகும் என்று தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications