மகாராஷ்டிரா: கனமழை வெள்ளத்துக்கு 3 நாட்களில் 48 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு கடந்த் 3 நாட்களில் 48 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் கொங்கன், அவுரங்காபாத் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

பல லட்சக்கணக்கான விவசாய பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கின. இந்த கனமழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 48 பேர் மரணம் அடைந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் சேதவிவரங்கள் மதிப்பிடப்பட்டும் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications