மும்பை அடல் சேது பாலத்திலிருந்து பெண் தற்கொலை முயற்சி! கடவுள் போல் காப்பாற்றிய கால் டாக்ஸி டிரைவர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள அடல் சேது பாலத்திலிருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக அவர் கார் டிரைவர் மற்றும் போலீஸாரால் காப்பாற்றப்பட்டார்.
வடகிழக்கு மும்பையின் முலுந்த் பகுதியை சேர்ந்தவர் ரீமா முகேஷ் படேல். இவருக்கு 56 வயதாகிறது. இவர் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்திற்கு நேற்று மாலை 5 மணிக்கு சென்றார். அங்கு பாதுகாப்பு தடுப்பு மீது அமர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடலில் எதையோ வீசி அடித்தார். பின்னர் அவர் உடனே கடலில் குதிக்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த கால் டாக்ஸி டிரைவர் அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்தார். ஆனாலும் அந்த பெண் வர மறுத்தார்.
இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து பணிக்காக சென்ற மும்பை போலீஸார் வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்ணை காப்பாற்ற கால் டாக்ஸி டிரைவருக்கு உதவினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த வீடியோ வெளியான நிலையில் அதில் பாதுகாப்பு தடுப்பில் இருந்து அந்த பெண் குதித்தார். அப்போது கால் டாக்ஸி டிரைவர் அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டார். இவர் பாலத்தில் நின்று கொண்டு அந்த பெண்ணை இழுத்தார். ஆனால் அந்த பெண்ணோ இன்னொரு கைகளால் அவரை தட்டி விட்டார்.

ஆனாலும் அந்த இளைஞர் அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவ்வழியாக வந்த போலீஸார் திபுதிபுவென ஓடி வந்து பாலத்தில் ஏறி தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்ணை காப்பாற்றினார்கள். இதையடுத்து அந்த பெண்ணை சமாதானம் செய்து அந்த கால் டாக்ஸியில் அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணுக்கு மன அழுத்தம் இருந்ததாக தெரிகிறது.

கடந்த மாதம் 38 வயது மதிக்கத்தக்க ஆண் இதே பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தோம்பிவிலியை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அந்த பாலத்திற்கு வந்து தனது காரை நிறுத்தினார். பின்னர் காரை பார்க் செய்துவிட்டு அவர் பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications