பெண்களை மயக்கி உல்லாசம்.. காவலாளியின் ஆணுறுப்பை அறுத்து படுகொலை.. தனியார் நிறுவன ஊழியர் கைது
மும்பை: மும்பையில் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த காவலாளியின் மர்ம உறுப்பை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
நவிமும்பை தலோஜா எம்ஐடிசியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஹரிநாராயணன் குப்தா (25). இவர் நேற்று முன் தினம் காலை அலுவலக அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மேலும் அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது. இது போன்ற கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை
அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் லோகுநாத் (46) என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உல்லாசம்
இந்த விசாரணையில் லோகுநாத் பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். ஹரிநாராயணன் குப்தா எம்ஐடியில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்களை மயக்கி தனது அறைக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

கொடூரக் கொலை
இது ஊழியர் லோகுநாத்துக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. இதுதொடர்பாக காவலாளியை அவர் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த லோகுரகுநாத் அவரது மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications