இனி இந்த குடும்பம் என்னோடது.. உத்தரகண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த 4 குழந்தைகளை தத்தெடுத்த சோனு சூட்
மும்பை: உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி தந்தையை இழந்த 4 குழந்தைகளை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சோனு சூட். என்னதான் இவர் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜத்தில் இவர்தான் ஹீரோ. இவரது தயாளு குணம் கொரோனாவுக்கு பிறகுதான் இந்தியாவிற்கு தெரிகிறது.
கொரோனா பாதிப்பால் திடீரென இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் மும்பை உள்ளிட்ட இடங்களில் வேலையில்லாமல் பணமில்லாமல் சிக்கியிருந்த கூலித் தொழிலாளர்களை மீட்டு தனது சொந்த செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
அத்தோடு பசியால் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களையும் அவர் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் மாடு வாங்க காசு இல்லாமல் இரு மகள்களை பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்.

செல்போன்
செல்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு போன் வாங்கிக் கொடுத்தார். இது போல் தொடர்ந்து நல்லதையே செய்து வருகிறார் சோனு சூட். இந்த நிலையில் மேலும் ஒரு நற்காரியத்தை செய்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறை உருகி கடந்த 7-ஆம் தேதி கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தந்தை பலி
இதில் ரிஷிகங்கா, தபோவன் நீர் மின் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துத் செல்லப்பட்டார்கள். ஏராளமானோரின் உடல்கள் மீட்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென தெரியவில்லை. இந்த நிலையில் தபோவன் நீர் மின் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் பண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

படிப்புச் செலவு
அவரின் வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த நிலையில் இவரது மறைவால் மனைவி, 4 குழந்தைகள் நிலைகுலைந்து போய்விட்டார்கள். இந்த நிலையில் உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 4 மகள்களை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். அஞ்சல், அந்த்ரா, காஜல், அனன்யா ஆகிய 4 பெண் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.

சோனு சூட்டிற்கு பாராட்டு
அத்துடன் அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இனி இந்தக் குடும்பம் என்னுடையது என பதிவிட்டுள்ளார். இதனால் சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications