ஆபாச படம் எடுக்க என்ன தேவை வந்துச்சு?.. உங்களால் என் புகழுக்கு களங்கம்.. கணவரிடம் ஷில்பா கண்ணீர்
மும்பை: ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு ராஜ்குந்த்ராவுடன் குற்றப்பிரிவு போலீஸார் சென்ற போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இத்தனை ஆண்டுகள் தான் சேர்த்து வைத்த புகழை கெடுத்துவிட்டதாகவும் கூறி அழுததாக போலீஸார் தெரிவித்தனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்ததாக அண்மையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மொபைல் செயலி மூலம் அவர் ஆபாச படங்களை பார்க்கும்படி வெளியிட்டதாகவும் அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை அவர் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளி ராஜ் குந்த்ரா
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ராஜ் குந்த்ராவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஷில்பா ஷெட்டியுடன் விசாரணை நடத்தினர். ராஜ் குந்த்ராவை கைது செய்த பிறகு முதல்முறையாக அவரை நேற்று முன் தினம் வீட்டிற்கு குற்றப்பிரிவு போலீஸார் அழைத்து சென்றனர்.

ஷில்பா ஷெட்டி
அப்போது ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா ஷெட்டி வாக்குவாதம் செய்ததாக போலீஸார் கூறுகிறார்கள். போலீஸார் சென்ற போது ஷில்பா ஷெட்டி மிகவும் வருத்தத்துடன் இருந்ததாகவும் அப்போது தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாவும் கூறப்படுகிறது.

ராஜ்குந்த்ராவிடம் ஷில்பா அழுகை
மேலும் அழுது கொண்டே ராஜ்குந்த்ராவிடம் " குடும்பத்தின் பெயர் கெட்டுவிட்டது. தொழில்களில் போட்ட ஒப்பந்தங்கள் ரத்தாகிவிட்டன. நிதி இழப்புகளும் ஏற்பட்டுவிட்டன. பெரிய தொழில்கள் செய்யும் நிலையில் இது போன்ற காரியத்தை செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

நற்பெயருக்கு களங்கம்
நீங்கள் செய்த இந்த ஒரு காரியத்தால் நான் இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது" என அழுது வாக்குவாதம் செய்தாராம். அவரை போலீஸார் சமாதானம் செய்தனர். ராஜ் குந்த்ரா வைத்திருந்த பழைய போனை கடந்த மார்ச் மாதம் தூக்கி போட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளாராம். ஒரு வேளை அந்த போனில் முக்கிய ஆதாரங்கள் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications