மும்பையில் இன்று மிக அதிகனமழை பெய்யும்... எச்சரித்த இந்திய வானிலை.. பள்ளிகளுக்கு லீவு
Recommended Video
மும்பை: மும்பையில் நேற்று இரவு 3மணி நேரத்தி 50 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில்,இன்று மிக அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் புறநகர் பகுதிகளில் 3 மணி நேரத்தில 50 மில்லிமீட்டர் மழை நேற்று இரவு பெய்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள மழை எச்ரிக்கையில் மும்பையில் இன்று மிக அதி கனமழை பெய்யும். இன்று காலை தொடங்கி 24 மணிநேரத்தில் சுமார் 204 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்து இருந்தது.
இதையடுத்து மும்பை, தானே, கொங்கன் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் ஜூனியர் காலேஜ்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என மகாராஷ்டிரா பள்ளி கல்வித்துறைஅமைச்சர் ஆசிஸ்சீலா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் சூழ்நிலையை பொறுத்து விடுமுறை விடலாம் என்றும் கூறியுள்ளார்.
அதி தீவிர மேகங்கள்.. மேக வெடிப்பு போல் கொட்டிய மழை.. எல்லாம் நடந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் மிககனமழை பெய்தது. இதனால் வெள்ளக்காடாக மும்பை மாறியதால் ரயில்சேவை, விமான சேவைகள் அப்போது கடுமையாக பாதிக்கப்பட்டது.