அமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.? மம்தாவுக்கு சிவசேனா பதிலடி
Recommended Video
மும்பை: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா, மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. அமித்ஷா மற்றும் மோடியை தடுப்பதினால் மட்டுமே, மம்தா தேர்தலில் வெற்றி பெற்று விட முடியுமா என சிவசேனா வினவியுள்ளது.
மேற்கு வங்கத்தில் அமித்ஷா பங்கேற்ற பேரணியின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. பின்னர் ஏற்பட்ட பயங்கர கலவரத்தின் போது அங்கிருந்த சமூக சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.

இதற்கு பாரதிய ஜனதாவினர் தான் முக்கிய காரணம். அவர்கள் தான் வன்முறைகளை தூண்டிவிட்டுள்ளனர் என மம்தா வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா கடவுள் ஒன்றும் இல்லையே என சரமாரியாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மம்தாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா, அமித் ஷா ஒன்றும் கடவுள் இல்லை தான். ஆனால் அதே சமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துறவியும் இல்லை என காட்டமாக கூறியுள்ளது.
சிவசேனா கட்சி தங்களது அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஜனநாயக அடிப்படையில் மம்தா அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அவரது வெற்றியும் தோல்வியும் ஜனநாயக அடிப்படையிலேயே தானே தீர்மானிக்கப்பட வேண்டும். பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் செல்ல விடாமல் சாலையில் இடைமறிப்பதால் மட்டுமே மம்தாவால் வெற்றி பெற்றுவிட முடியாது
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சியின் போதும் அங்கு வன்முறை இருந்தது. தற்போது மம்தா ஆட்சியிலும் இந்த கதை தொடர்கிறது. வன்முறைகள் காரணமாக மேற்கு வங்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications