ஆர்எஸ்எஸ் தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு.. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் வருகிறதா?
மும்பை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் அமித்ஷா இருவரும், இன்று மும்பையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக இருவரும் விவாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
[தொலைச்சு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. எம்.பி அதிரடி மிரட்டல்.. குளிரிலும் நடுங்கும் நீலகிரி ]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கோரிக்கை. இந்த கோரிக்கையை சமீபகாலமாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, வலுப்பெற்று வருகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதாயத்தைக் கொடுக்கும் என்பதும் அக்கட்சியின் சிலரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் மோகன் பகவத்தை அமித்ஷா சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.