இரண்டு போர்களை கடந்திருக்கிறேன் - முதுகு சில்லிட்டுப் போகும்.. அனுபவம் பகிரும் ஆனந்த் மஹிந்திரா!
மும்பை: இரண்டு போர்களை என்னுடைய சிறு வயதில் கடந்திருக்கிறேன் என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகியுள்ளது. தற்போது போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு தரப்பிலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன.
ரஷ்யாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்த நாடுகள் மீதும் ரஷ்யா பொருளாதார தடையை விதித்துள்ளது.

உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்து, உக்ரைனின் பல இடங்களைக் கைப்பற்றி வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவியைக் கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. உக்ரைன் லிவிவ் பகுதியில் அபாய சங்கு ஒலிக்கும் வீடியோவைப் பகிர்ந்து அவரது அனுபவங்களைப் பதிவிட்டிருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
|
ஆனந்த் மஹிந்திரா
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில், ''இரண்டு போர்களை என்னுடைய சிறு வயதில் கடந்திருக்கிறேன். 1965 மற்றும் 1971 வருடங்களில் மும்பையில் அபாய சங்கு ஒலிக்கும் போது முதுகு சில்லிடும். அந்த உணர்வை என்னால் நினைவுகூர முடிகிறது. அபாய சங்கின் சத்தம் எனக்கு பயமுறுத்தக்கூடிய அந்தக் கனவுகளை எழுப்புகிறது. போர்களில் இருந்து இந்த உலகம் எதையும் கற்று கொண்டதாகத் தெரியவில்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.
|
போர்
ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்வீட்டில் 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் சமயத்தில் நாட்டு மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க களமிறங்கியிருப்பது மிகப்பெரிய சக்தியாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தியை விடவும் பெரியது.
இப்படிப்பட்ட சமயத்தில் படையெடுப்பு சாத்தியம், ஆனால் ஆக்கிரமிப்பு சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.

ஆயுதம் ஏந்தும் மக்கள்
உக்ரேன் மீது ரஷ்யா போர் நடத்திவரும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி ரஷ்யப் படையை எதிர்க்க துணிந்துவிட்டார்கள். இதைத்தான் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உக்ரேனியர் ஒருவர் பேசுகையில், ''ரஷ்யர்கள் இதை நிறுத்தப்போவதாக தெரியவில்லை. இதனால் நாங்களும் போராட வந்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications