இரண்டு போர்களை கடந்திருக்கிறேன் - முதுகு சில்லிட்டுப் போகும்.. அனுபவம் பகிரும் ஆனந்த் மஹிந்திரா!
மும்பை: இரண்டு போர்களை என்னுடைய சிறு வயதில் கடந்திருக்கிறேன் என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகியுள்ளது. தற்போது போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு தரப்பிலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன.
ரஷ்யாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்த நாடுகள் மீதும் ரஷ்யா பொருளாதார தடையை விதித்துள்ளது.

உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்து, உக்ரைனின் பல இடங்களைக் கைப்பற்றி வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவியைக் கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. உக்ரைன் லிவிவ் பகுதியில் அபாய சங்கு ஒலிக்கும் வீடியோவைப் பகிர்ந்து அவரது அனுபவங்களைப் பதிவிட்டிருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
|
ஆனந்த் மஹிந்திரா
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில், ''இரண்டு போர்களை என்னுடைய சிறு வயதில் கடந்திருக்கிறேன். 1965 மற்றும் 1971 வருடங்களில் மும்பையில் அபாய சங்கு ஒலிக்கும் போது முதுகு சில்லிடும். அந்த உணர்வை என்னால் நினைவுகூர முடிகிறது. அபாய சங்கின் சத்தம் எனக்கு பயமுறுத்தக்கூடிய அந்தக் கனவுகளை எழுப்புகிறது. போர்களில் இருந்து இந்த உலகம் எதையும் கற்று கொண்டதாகத் தெரியவில்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.
|
போர்
ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்வீட்டில் 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் சமயத்தில் நாட்டு மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க களமிறங்கியிருப்பது மிகப்பெரிய சக்தியாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தியை விடவும் பெரியது.
இப்படிப்பட்ட சமயத்தில் படையெடுப்பு சாத்தியம், ஆனால் ஆக்கிரமிப்பு சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.

ஆயுதம் ஏந்தும் மக்கள்
உக்ரேன் மீது ரஷ்யா போர் நடத்திவரும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி ரஷ்யப் படையை எதிர்க்க துணிந்துவிட்டார்கள். இதைத்தான் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உக்ரேனியர் ஒருவர் பேசுகையில், ''ரஷ்யர்கள் இதை நிறுத்தப்போவதாக தெரியவில்லை. இதனால் நாங்களும் போராட வந்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications