இன்னொரு ஐபிஎல் சீசன் மகிழ்ச்சி.. அப்படியே அந்த அரசியல்.. தோனியை கோர்த்துவிடும் ஆனந்த் மகிந்திரா
மும்பை: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அரசியலில் களம் காண வேண்டும் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் எனும் கிரிக்கெட் தொடர் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இறுதி போட்டி நடந்தது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெல்ல 10 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ரசிகர்கள் கடவுளை வேண்டி கொண்டனர். ஒரு சிலர் சமயபுரத்து ஆத்தா பாத்து செய் என பக்தி பரவசத்தில் வேண்டிக் கொண்டனர். ஜெயித்தவுடன் சாமியாடினர். சிஎஸ்கே அணி வெற்றிக்கு சிறிய குழந்தை முதல் வயதான பாட்டி வரை கொண்டாடி மகிழ்ந்தனர். ஜடேஜாவின் திறமையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
அப்போது ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரியை அடித்தார். இதையடுத்து சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்றது. டீம் வெல்லும் வரை கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருந்த தோனி, வென்றதுமே ஓடி போய் ஜடேஜாவை தூக்கி வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் கொண்டாடினார்.
இந்த வெற்றியை அடுத்து கிரிக்கெட் மைதானத்திலேயே சென்னை அணி வீரர்கள் கொண்டாடினர். இந்த கோப்பை நேற்றைய தினம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு திநகரில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு இந்தியா, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து அணியின் கேப்டன் தோனி ரசிகர்களின் அன்புக்காக, தான் இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார். தோனியின் விருப்பத்திற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பரபரப்பான ட்வீட்டை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தோனியின் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் தோனி அரசியலில் களம் காண வேண்டுமென நான் விரும்புகிறேன். பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பைஜயெந்த் ஜெய் பாண்டாவின் தலைமையிலான என்சிசி ஆய்வுக் குழுவில் தோனியுடன் நான் பணியாற்றியிருக்கிறேன் என ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications