Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தம் 17 மாடிகள்.. ரூ.3,700 கோடி ஆடம்பர பங்களாவை பறிகொடுத்த அனில் அம்பானி.. அமலாக்கத்துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல தொழிலதிபரான அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ரூ.3,700 கோடி மதிப்புள்ள 17 மாடிகள் கொண்ட 'அபோட்' எனும் ஆடம்பர குடியிருப்பை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

நம் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் தற்போதும் கொடிகட்டி பறக்கிறார். ஆனால் இவரது உடன் பிறந்த சகோதரர் அனில் அம்பானி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.

அனில் அம்பானி ரிலையன்ஸ் குரூப் தலைவராக இருந்தார். மேலும் ஏராளமான தொழில்களை செய்து வந்த நிலையில் நஷ்டம் அடைந்தார். அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. வங்கிகளில் பணம் வாங்கி அதனை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

அதாவது வங்கியில் கடன் வாங்கி அதனை பிற நிறுவனங்களுக்கு மாற்றி நிதி முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை யெஸ் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அதனை அனில் அம்பானி பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

அதோடு இதுபற்றி விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க யெஸ் வங்கியில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் உள்ளது. இதுபற்றியும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் இருந்ததால் அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் நுழைந்தது. ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் என்று 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அதிரடி சோதனை மேற்கொண்டது.

இதுதொடர்பாக அனில் அம்பானியிடம் முதற்கட்டமாக கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2வது கட்ட விசாரணைக்கு அனில் அம்பானி அழைக்கப்பட்டுள்ளார். விரைவில் அனில் அம்பானி அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.

இந்நிலையில் தான் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அனில் அம்பானியின் 17 மாடி கொண்ட, 'அபோட்' என்று பெயரிடப்பட்ட மும்பை ஆடம்பர பங்களாவை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டடம்

மும்பையின் பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15,700 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+