சாலையில் நடந்தால் போலீஸ் பிடிப்பார்கள் என தண்டவாளத்தில் நடந்ததால் ஏற்பட்ட அவுரங்காபாத் விபரீதம்
மும்பை: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு சரக்கு ரயிலில் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
உணவுக்கும், வேலைக்கும் வழியில்லாததால், ஊருக்கு செல்வதற்கே பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லவே விரும்புகிறார்கள். ஆனால் ரயில்களும், பேருந்துகளும் இல்லாததால் ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே நடந்து செல்கிறார்கள்.
இந்தியாவின் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் தினசரி பல்லாயிரம் பாதங்கள் சாலைகளின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றன.

17 தொழிலாளர்கள்
அப்படிச்சென்ற ஆயிரக்கணக்கான தொழிலார்களில் இன்று உயிரிழந்த 17 தொழிலாளர்களும் அடக்கம். 17 தொழிலாளர்களும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஜல்னாவில் இருந்து புவாசல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள் சாலைகளில் நடந்தால் காவல் துறை பிடித்து விடும் என்று அஞ்சி, அவர்கள் ரயில்பாதை அருகே நடந்து சென்றிருக்கின்றனர். 36 கிலோ மீட்டர் நடந்த நிலையில் அவர்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்தார்கள்.

வந்தது சரக்கு ரயில்
ரயில்கள் எதுவும் வராது என்று நினைத்த அவர்கள் ரயில் தண்டாவளத்திலேயே அசதியுடன் வெள்ளிக்கிழமை (இன்று) விடியற்காலையில் உறங்கி கொண்டிருந்திருக்கிறார்கள். சரக்கு ரயில்கள் போக்குவரத்துக்கு தடையில்லை என்பது பாவம் அவர்களுக்கு தெரியாது போல.. இன்று அதிகாலை சரக்கு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

ஏறியது ரயில்
வெளிச்சம் இல்லாததால் தண்டவாளத்தில் மனிதர்கள் படுத்து இருப்பது ஓட்டுநருக்கு சரியாக தெரியவில்லை. பல கிலோமீட்டர் நடந்து வந்ததால் தொழிலாளர்கள் யாருக்கும் ரயில் வரும் சத்தமும் கேட்கவில்லை. இந்நிலையில் சில மீட்டர் தூரத்தில் இருக்கும் போது ஓட்டுநர் சிலர் தண்டவாளத்தில் படுத்திருப்பதை கவனித்து இருக்கிறார். உடனே பிரேக் போட முயன்றுள்ளார். எனினும் அவர்கள் அனைவர் மீது ரயில் ஏறி நசுக்கியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உதவிகள் செய்யப்படும்
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதால் மிகுந்த வேதனை அடைந்தேன். . ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசியுள்ளேன். அவர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்"என்று கூறியுள்ளார். ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications