அவுரங்கசீப் எனும் கொடுங்கோலனை உண்மையான முஸ்லிம் ஆதரிக்க கூடாது- பற்ற வைத்த மகா. துணை முதவ்லர் ஷிண்டே
மும்பை: முகலாயப் பேரரசன் அவுரங்கசீப் ஒரு கொடுங்கோலன்; சர்வாதிகாரி; இந்திய முஸ்லிம்கள் யாரும் அவுரங்கசீப்பை ஆதரித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரி பெரும் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் இந்த மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் கல்லறை, மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் உள்ளது. இந்துத்துவா அமைப்பினர் இந்த கல்லறையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். மராத்திய மாமன்னன் சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர் அவுரங்கசீப் என்பதால் இந்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆவணப் படங்கள், வெப் சீரிஸ், சினிமாக்களிலும் சிவாஜியின் மகனை கொலை செய்த அவுரங்கசீப் என்பதே பதிய வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு ஆஸ்மியோ, அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசினார். இதனால் மராத்திய அமைப்புகள் மற்றும் இந்துத்துவா இயக்கத்தினர் கொந்தளித்து போயினர். மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என போராடி வருகின்றனர். நாக்பூரில் இந்த போராட்டம் பெரும் வன்முறையாகவும் வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே அவுரங்கசீப் கல்லறையை இடித்து தரைமட்டமாக்கினால் ரூ25 லட்சம் சன்மானம்- பரிசுத் தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்பை இந்துத்துவா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் பின்னணியில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், அவுரங்கசீப் ஒரு கொடுங்கோலன்; இந்திய நாட்டின் எதிரி. மகாராஷ்டிரா மக்களின் எதிரி; அவுரங்கசீப் சர்வாதிகாரி. மகாராஷ்டிராவில் மாவீரன் சத்ரபதி சிவாஜியின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றவே போராட்டம் நடைபெறுகிறது. அவுரங்கசீப்பை ஆதரிப்பவர்கள் வரலாற்றை படிக்க வேண்டும்; சாவா திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.
#WATCH | Mumbai: On Nagpur violence, Maharashtra Deputy CM Eknath Shinde says, "...I will also say that even a true Muslim of the country will not support Aurangzeb. Aurangzeb was the enemy of Maharashtra, the enemy of the country...Aurangzeb is a traitor. The protestors are… pic.twitter.com/Z6oGFMkvGZ
— ANI (@ANI) March 18, 2025
ஆனால் மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஓவைசி, கடந்த சில வாரங்களாகவே மகாராஷ்டிரா முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை வெறுப்பை விதைத்து வருகின்றனர். முதல்வரும் அமைச்சர்களும் தங்களது பொறுப்பு என்ன என்பதை கூட உணராமல் இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அவுரங்கசீப்பின் உருவபொம்மையை எரிக்கின்றனர். குரான் வாசகங்கள் எழுதப்பட்ட துணிகளை எரிக்கின்றனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னர்தான் நாக்பூரில் வன்முறைகள் ஏற்பட்டன என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications