மகாராஷ்டிரத்தை ஆள போவது யார்?.. ஆளுநரை தனித்தனியே சந்தித்த பாஜக, சிவசேனா
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரத்தை ஆட்சி செய்யப் போவது யார் என விவகாரத்தில் இழுபறி நீடித்து வருவதால் ஆளுநரை பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியே சந்தித்து பேசின.
மகாராஷ்டிரத்துக்கும் ஹரியானாவுக்கும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஹரியாணாவில் பாஜக ஆட்சி அமைத்தது. மகாராஷ்டிரத்தில் பாஜகவும் சிவசேனாவும் முறையே 105 இடங்களும் 56 இடங்களும் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 145 இடங்களை பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஆனால் மகாராஷ்டிரத்திலோ எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிவசேனா முயல்கிறது.
முதல்வர் பதவியில் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் இருக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமை நடந்த சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவோ முதல்வர் பதவியை தர மறுக்கிறது. இந்த நிலையில் இரு கட்சிகளும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
அதன்படி சிவசேனாவின் திவாகர் ரோட்டே ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை காலை 10.30 மணிக்கு சந்தித்தார். முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் காலை 11 மணிக்கு ஆளுநரை சந்தித்து பேசினார். பெரும்பான்மை இல்லாததால் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க உரிமை அளிக்கக் கூடாது என ஆளுநரை சிவசேனா வலியுறுத்தவே இந்த சந்திப்பு என கூறப்படுகிறது.
அது போல் 105 இடங்களை பெற்றுள்ளதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோருவதற்காக ஆளுநரை பாஜக சந்திக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இரு கட்சிகளும் தாங்கள் மரியாதை நிமித்தமாகவும் தீபாவளி வாழ்த்துகளை கூறிக் கொள்ளவும் ஆளுநரை சந்தித்ததாக கூறியுள்ளன.
-
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications