பாஜகவின் பிடியிலிருந்து விலகும் ஜார்க்கண்ட்.. சின்ன மாநிலங்களில் கூட தோல்வி.. சிவசேனா தாக்கு
Recommended Video
மும்பை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தோல்வி அடைய போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அக்கட்சியை சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகின.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படுகிறது. இதில் ஜேஎம்எம் 30 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும் பாஜக 25 தொகுதிகளிலும், ஜேவிஎம்பி 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ இரு தொகுதிகளிலும், ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதாவது காங்கிரஸ்-ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணியோ அறுதி பெரும்பான்மையை கடந்து 47 இடங்களில் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலம்
எனவே ஜார்க்கண்டில் பாஜக ஆட்சியை இழக்க போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில் பாஜகவின் கைகளில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் நழுவுகிறது.

வெற்றி
மகாராஷ்டிராவுக்கு பிறகு பெரும் முயற்சிகள் எடுத்தும் சின்ன மாநிலங்கள் கூட பாஜகவின் பிடியிலிருந்து விலகுகிறது என ராவத் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
எனினும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. இதையடுத்து பல்வேறு ட்விஸ்ட்களுக்கு பிறகு, பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. ஆனால் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே ஆட்சியிலிருந்து விலகியது.

காங்கிரஸ்
இதையடுத்து சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இதில் முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்றுள்ளார். அமைச்சரவையில் 3 கட்சிகளும் கணிசமான இடங்களில் அங்கம் வகிக்கின்றன.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications