மகாராஷ்டிரா: 'மராத்தா' Vs 'பிராமணர்': தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகிறார்.. இன்று பாஜக அறிவிப்பு?
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியின் புதிய அரசு வரும் 5-ந் தேதி பதவியேற்கிறது. மகாயுதி கூட்டணி அரசின் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை மராத்தா சமூகத்தினரே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் சிறுபான்மை பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆனாலும் புதிய ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில்தான் வரும் 5-ந் தேதி மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற போதும் முதல்வர் பதவி தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே மோதல் வெடித்தது. முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே விட்டுத்தரவில்லை. இதனால் பிரதமர் மோடி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முதல்வர் பதவியை விட்டுத் தந்தார் ஏக்நாத் ஷிண்டே.
ஆனால் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க வேண்டும்; ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு உள்துறை அமைச்சர் இலாகா ஒதுக்க வேண்டும் எனவும் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தினார். இதனால் பாஜக- சிவசேனா இடையேயான மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக சட்டசபை குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினரையே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இதுவரையில் மராத்தா ஜாதியினர் இல்லாமல் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட 2 பிராமணர்கள்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் முன்னர் முதல்வராக இருந்த போது மராத்தா ஜாதி லாபி அவருக்கு கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தது.
தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக வெற்றி பெற்ற போதும் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்பது பாஜகவினர் எதிர்பார்ப்பாக இருந்தது; ஆனாலும் மராத்தா லாபி மீண்டும் தலைதூக்கி தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த தடைகளை எல்லாம் உடைத்து மீண்டும் மகாராஷ்டிரா முதல்வராக இருக்கிறார் தேவேந்திர பட்னாவிஸ். இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications