பெண்களுக்கு ரூ1,500 வழங்கியதில் பாஜக கூட்டணி அரசின் புதுமை! திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. மகாராஷ்டிராவில் மீண்டும் மகாயுதி கூட்டணி ஆட்சியே தொடர இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிரதான காரணமாக அனைவராலும் சுட்டிக்காட்டப்படுவது பெண்களுக்கான உதவித் தொகை திட்டம். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும் மகாராஷ்டிரா பாஜக அரசு செயல்படுத்திய விதம், பெண்கள் வாக்குகளை மொத்தமாக அந்த கூட்டணிக்கு கொட்ட வைத்துவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக தனித்தே 132 இடங்களில் வெற்றி பெற்றது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 57; அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 41; உத்தவ் தாக்கரே சிவசேனா 20; காங்கிரஸ் 16; சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றன. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்கு தேவை 145 இடங்கள். பாஜக கூட்டணியோ 230 இடங்களைக் கைப்பற்றி மிகப் பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

பிரம்மாண்ட வெற்றி: மகாராஷ்டிராவில் பாஜக பெற்ற முதலாவது பிரம்மாண்ட வெற்றி. 1972-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சி அல்லது கூட்டணி இத்தனை இடங்களை அள்ளியதும் கிடையாது. பாஜக கூட்டணியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பெண்களின் வாக்குகள் மிகப் பெரிய உதவியாக இருந்துள்ளது என கூறப்படுகிறது. இதற்கு காரணமே பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் அன்பு சகோதரி திட்டம்.
பெண்களுக்கு நிதி உதவி: தமிழ்நாடு மட்டுமல்ல.. நாட்டின் பல மாநிலங்களிலும் பெண்களுக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையே தலைகீழாக எப்படிப் புரட்டிப் போட்டது இந்தத் திட்டம்?
மகாராஷ்டிரா பார்முலா: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர்தான் பெண்களுக்கு மாதம் ரூ1,500 வழங்கும் நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்தியது தெரியுமா? ஒரே கட்டமாக 5 மாத தவணை பணத்தை பெண்களில் வங்கிக் கணக்கில் செலுத்தியது பாஜக கூட்டணி அரசு. அதாவது சட்டசபை தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்னர் ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ7,500 கொடுத்தது பாஜக அரசு. இந்தத் திட்டத்தில் விட்டுப் போன பெண்களையும் கணக்கில் எடுத்து 'தகுதி' உள்ளவர்கள் என்கிற பாரபட்சம் எல்லாம் பார்க்காமல் லம்ப்பாக ரூ7,500 அரசுப் பணத்தை அள்ளிக் கொடுத்தது பாஜக கூட்டணி அரசு.
பெண் வாக்காளர்கள்: மகாராஷ்டிராவில் 4.70 கோடி பேர் பெண் வாக்காளர்கள். இவர்களில் 2.30 கோடி பேருக்கு ரூ7,500 பணத்தை ரொக்கமாகவே வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டது பாஜக கூட்டணி அரசு. அத்துடன் நிற்கவில்லை. எங்களுக்கு ஓட்டுப் போட்டால் இந்த தொகையை ரூ2,100 ஆகவும் உயர்த்துவோம் எனவும் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்தது. இதேபோல பெண் வாக்காளர்களை குறிவைத்து பாஜக அரசு பேருந்து பயணத்தில் சலுகை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியது. இதனால் பெண் வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜக கூட்டணிக்கு தங்களது பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொட்டிக் குவித்துவிட்டனர். பாஜக பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த மகாராஷ்டிரா பார்முலாவை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இனி தேர்தல் களத்தில் பயன்படுத்தலாம்.
வெங்காயம்: இதேபோல பாஜக கூட்டணி அரசின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் 'வெங்காயம்'. மத்தியில் ஆளும் பாஜக அரசு, வெங்காய ஏற்றுமதி தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் நாசிக் உள்ளிட்ட பிராந்தியங்களில் வெங்காய விவசாயிகள் பெரும் துன்பத்துக்குள்ளாகினர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கிவிட்டது. இதனால் வெங்காய விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மகிழ்ச்சியையும் விவசாயிகள் வாக்குகளாக பாஜகவுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications