இனிதான் காஷ்மீர் சொர்க்கமாகும்.. தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.. இந்திய தொழில் அதிபர்கள் வரவேற்பு
மும்பை: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளதற்கு இந்திய தொழில்அதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். காஷ்மீரில் அதிக தொழில் முதலீடுகள் ஏற்படும் வழிகள் உருவாகி இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370 வது பிரிவு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் இனி இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம். மேலும் மற்ற மாநிலங்களைப் போலவே காஷ்மீரிலும் இந்திய சட்டங்கள் அனைத்தும் செல்லுபடியாகும்.
இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இனி ஜம்மு காஷ்மீரில் குடியேறி வீடு நிலம் வாங்கி நிரந்தரமாக வசிக்க முடியும். இதேபோல் அந்த மக்களுக்கு நாட்டில் உள்ள கட்டாயக கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் கல்வி கிடைக்கும்,

அரவணைக்கும் நேரம்
மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு இந்திய தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு- காஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கை ஏன் இத்தனை காலமாக எடுக்கப்படாமல் இருந்தது என்றும், தேசிய சமுதாயத்தில் காஷ்மீரிக்களை அனைவரும் அரவணைக்கும் நேரம் வந்திருப்பதாகவும் கூறினார்.

வளர்ச்சிக்கு அடித்தளம்
அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு இன்று சந்திக்கும் நிகழ்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்றும் ஜம்மு- காஷ்மீரின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் அடித்தளமிடுபவை என்றும் கூறியுள்ளார்.

நீண்ட கால விருப்பம்
தேர்தல் வாக்குறுதியை பாரதிய ஜனதா நிறைவேற்றி உள்ளதால் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நீண்டகால விருப்பம் என ஜேஎஸ்டபிள்யூ குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் கூறியுள்ளார்.

அதிக முதலீடு
மத்திய அரசின் முடிவால் ஜம்மு- காஷ்மீரில் அதிக தொழில் முதலீடுகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் தலைவர் ராஜிவ் தல்வார் கூறியுள்ளார்.

காஷ்மீர் இனி சொர்க்கம்
ஆர்பிஜி குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் துலிப் மலர்த் தோட்டம் உள்பட 2 அழகிய தொழிற்சாலைகள் இருந்தன. ஆனால் அவை தீவிரவாதத்தால் மூட நேரிட்டது.. இப்போது சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் காஷ்மீரில் முதலீடுகள் திரும்பும். இனி தான் உண்மையான சொர்க்கமாக காஷ்மீர் திகழும் என்று கூறியுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications