ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு… அமலாக்கத்துறை முன் சந்தா கோச்சார் விசாரணைக்காக ஆஜர்
மும்பை: கடன் முறைகேடு விவகாரத்தில் ஐசிஐசிஐயின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார்.
வீடியோகான் குழுமத்திற்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதில் விதி முறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஆதாயத்துக்காக கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வேணு கோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், சந்தா கோச்சாருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் சுற்றறிக்கை அனுப்பியது.
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.
இருவரின் வீடுகளிலிருந்து ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து அதன் விபரங்களை இருவரிடமும் கேட்டுப் பெறுவதற்காக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, சந்தா கோச்சார் விசாரணைக்காக ஆஜர் ஆனார். அவரிடம் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், அதன் விவரங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும், கடன் முறைகேடு தொடர்பான ஆவணங்களைச் சந்தா கோச்சார் அழித்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications