Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் பாஜக வெல்வது ஈஸி இல்லை.. ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி.. ABP கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு இந்தியா கூட்டணி 'டஃப் ஃபைட்' கொடுக்கும் என ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய 2024 லோக்சபா தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Congress and India ally gives Tough Fight To BJP n Maharashtra as per ABP-Cvoter Opinion Poll

மகாராஷ்டிராவில் டஃப் ஃபைட்: மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தம் 48 எம்.பி தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 20 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் நான்கு இடங்களை வெல்லும் என்றும், அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார் ஆகிய கட்சிகள் இணைந்து 16 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 41 இடங்களில் வென்றிருந்தது. என்.டி.ஏ கூட்டணியில் சிவசேனா 18, பாஜக 23, தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 5 இடங்களில் வென்றிருந்தது. அசாதுதீவ் ஓவைசி கட்சி கூட்டணி 1 இடத்தில் வென்றது.

2019ல் என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் சிவசேனா இரண்டாக பிளவு பட்டுள்ளது. ஷிண்டே அணி பாஜகவுடனும், உத்தவ் தாக்கரே அணி தற்போது இந்தியா கூட்டணியிலும் உள்ளது. அதேபோல, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் சந்திர பவார் அணி இந்தியா கூட்டணியிலும், அஜித் பவார் அணி பாஜக கூட்டணியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் வோட் ஷேரிங்கை பொறுத்த வரையில், பாஜக தலைமையிலான கூட்டணி 42.7 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 42.1 சதவீத வாக்குகளையும் பெறும் என ஏபிபி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 41.5 சதவீதம் பேர் மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், 29.47 சதவீதம் பேர் ஓரளவுக்கு திருப்தியாக இருப்பதாகவும், 27.07 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் யாரை அடுத்த பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தவர்களில் 58.83 சதவீதம் பேர் நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை பிரதமராக நீடிக்க வேண்டும் என்றும், 28.83 சதவீதம் பேர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+