மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க காங்.க்கு தார்மீக உரிமை இல்லை- தொடரும் சஞ்சய் நிருபத்தின் எதிர்ப்பு!
மும்பை: மகாராஷ்டிரத்தில் புதிய அரசை அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு தேர்தல் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது.
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க பாஜகவை ஆளுநர் கோஷ்யாரி அழைத்தார். ஆனால் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தெரிவித்துவிட்டது. இதையடுத்து 2-ஆவது மிகப் பெரிய கட்சியான சிவசேனாவை அழைத்தார்.

தேசியவாத காங்கிரஸ்
அந்த கட்சிக்கு நேற்று வரை கெடு விதித்த நிலையில் ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதத்தை சிவசேனா கொடுக்கவில்லை என்பதால் 3-ஆவது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியை அழைத்துள்ளார்.

ஒத்துழைக்கவில்லை
இந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது. ஆனால் இதற்கு இரு கட்சிகளும் ஒத்துழைக்கவில்லை. சிவசேனாவுடன் கூட்டணிக்கு புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் ஓகே சொன்ன நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், அது பேரழிவை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

தார்மீக உரிமை
காங்கிரஸ் ஆதரவு அளித்திருந்தால் தேசியவாத காங்கிரஸுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைத்திருக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து சஞ்சய் நிருபம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சியை உருவாக்க காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமையேதும் இல்லை.
|
தோல்வி
மாநிலத்தில் நிலவும் நிலையற்றத்தன்மைக்கு எங்களை குறை கூறுவது அர்த்தமில்லாத செயல். மாநிலத்தை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு கொண்டு சென்றது பாஜக, சிவசேனாவின் தோல்வியாகும் என்று சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.
-
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications