71ஆவது உலக அழகி போட்டி! உலக அழகியானார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா
மும்பை: 71ஆவது உலக அழகி போட்டியில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (24) மகுடம் சூட்டினார்.
உலக அழகி போட்டிகள் கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன. 1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு பட்டத்தை தட்டி சென்றார்.

இந்தியாவில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் இந்த போட்டி மும்பையில் நடைபெற்றது.
இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் அமைப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜூலியா மோர்லி கூறுகையில், 71ஆவது உலக அழகி இறுதி போட்டியை இந்தியாவில் நடத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான கலாச்சாரம், அழகிய இந்திய நகரங்களையும் காண நாங்கள் காத்திருக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

130 நாடுகளில் இருந்து அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். கடந்த மாதம் 18ஆம் தேதி டெல்லியில் இந்த போட்டி தொடங்கியது. இதன் இறுதி போட்டி நேற்றைய தினம் (மார்ச் 9) நடைபெற்றது. இந்தியாவில் பல நகரங்களில் போட்டியாளர்களின் திறமை வெளிக் கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
ஏற்கெனவே உலக அழகியாக இருப்பவர் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா. இவர் இந்தியாவில் உலக அழகி போட்டி குறித்த விளம்பரப்படுத்தும் பணிகள் உள்ளார்.

மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச கண்காட்சி அரங்கில் நேற்று இறுதி போட்டி நடந்தது. உலகம் முழுவதும் இறுதி போட்டி ஒளிபரப்பப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த இறுதி போட்டியை திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
இந்த இறுதி போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்றிருந்தனர். இந்தியாவை தவிர மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேஷியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், வேல்ஸ், துனிசியா, போட்ஸ்வானா, கவுதமாலா, ஜிப்ரால்டர் நாடுகளை சேர்ந்த அழகிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இந்த நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024 ஆம் ஆண்டுக்கான 71ஆவது உலக அழகி பட்டத்தை வென்றார். லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார். இறுதி போட்டியில் வென்ற கிறிஸ்டினாவுக்கு 2021 ஆம் ஆண்டு வென்ற போலாந்து நாட்டு கரோலினா உலக அழகிக்கான மகுடத்தை சூட்டினார்.
இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி போட்டியில் முதல் 4 இடங்களுக்குள் வரவில்லை. இவர் 2022 ஆம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றார். உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறையை இந்தியா வென்றுள்ளது. ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியர்கள் ஆவர்.

இந்த விழாவில் முன்னாள் உலக அழகிகளான மனுஷி சில்லர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications