தாவூத் இப்ராகிம் உங்களோடு பேச விரும்புகிறார்.. முதல்வருக்கு வந்த அழைப்பு.. மும்பையில் ஷாக்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் தாவூத் இப்ராகிம் கும்பல் என்று கூறி பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பங்களா மாடோஷ்ரியில் இருக்கிறது. இன்று இரவு அவரது வீட்டுக்கு நிழல் உலக தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அழைத்தவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பேச வேண்டும் என்று கோரினார். அவர் எந்த அச்சுறுத்தல்களையும் வெளியிடவில்லை என்று அம்மாநில அமைச்சர் அனில் பராப் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், சனிக்கிழமை இரவு யாரோ ஒருவர் 'மாடோஷ்ரீ' (முதல்வர் இல்லம்) இல்லத்திற்கு தொலைபேசி எண்ணை இரண்டு முறை அழைத்துள்ளார். தாவூத் இப்ராஹிம் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பேச விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், தொலைபேசி ஆபரேட்டர் அந்த அழைப்பை முதல்வருக்கு மாற்றவில்லை., இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.
இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மும்பையின் பாந்த்ராவில் உள்ள முதல்வரின் இல்லததிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரவை முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு வந்த அச்சுறுத்தலைக் கண்டித்துள்ளதுடன், கவலை தெரிவித்தது. இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ளுமாறு அம்மாநில அமைச்சரவை மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications