தாவூத் இப்ராகிம் உங்களோடு பேச விரும்புகிறார்.. முதல்வருக்கு வந்த அழைப்பு.. மும்பையில் ஷாக்!
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் தாவூத் இப்ராகிம் கும்பல் என்று கூறி பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பங்களா மாடோஷ்ரியில் இருக்கிறது. இன்று இரவு அவரது வீட்டுக்கு நிழல் உலக தாவூத் இப்ராஹிமின் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அழைத்தவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பேச வேண்டும் என்று கோரினார். அவர் எந்த அச்சுறுத்தல்களையும் வெளியிடவில்லை என்று அம்மாநில அமைச்சர் அனில் பராப் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், சனிக்கிழமை இரவு யாரோ ஒருவர் 'மாடோஷ்ரீ' (முதல்வர் இல்லம்) இல்லத்திற்கு தொலைபேசி எண்ணை இரண்டு முறை அழைத்துள்ளார். தாவூத் இப்ராஹிம் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பேச விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், தொலைபேசி ஆபரேட்டர் அந்த அழைப்பை முதல்வருக்கு மாற்றவில்லை., இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை" என்றார்.
இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மும்பையின் பாந்த்ராவில் உள்ள முதல்வரின் இல்லததிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சரவை முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு வந்த அச்சுறுத்தலைக் கண்டித்துள்ளதுடன், கவலை தெரிவித்தது. இந்த சம்பவத்தை கவனத்தில் கொள்ளுமாறு அம்மாநில அமைச்சரவை மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications