அட இதைக் கூட விடலையாப்பா நீங்க.. பாஜக கட்சிக்காரர்களிடம் சிக்கி கைதான பரிதாப நாய்!
பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த நாயை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மும்பை: பிரச்சாரம் செய்வதற்கு நன்றியுள்ள நாயைகூட விடவில்லை! ஒரு நாயின் கழுத்தில் கட்சி கொடியை பொருத்தி தெருத் தெருவாக அலையவிட்டு பிரச்சாரம் செய்துள்ளார் அந்த நாயின் உரிமையாளர்!
நேற்று மகாராஷ்டிராவில் நந்தூர்பர் உட்பட 17 மக்களவை தொகுதிகளுக்கு 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
நவ்ரத்நகர் பகுதியில் நாய் ஒன்று பாஜகக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது. அதாவது, "பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் நாயின் மீது ஒட்டப்பட்டிருந்தது. காலை முதல் சாயங்காலம் வரை அந்த நாய் ஒரு தெரு விடாமல் ஓடி கொண்டிருந்தது.
ரபேல் வழக்கு.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.. 4 நாட்களில் பதில் அளிக்க உத்தரவு!
இப்படி நாய் ஒன்று பாஜகவுக்கு ஆதரவாக தெரு தெருவாக அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்கிறது என்ற விவரம் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனடியாக விரட்டி பிடித்து நாயை கைப்பற்றினர். தேர்தல் பிரச்சாரம் காலக்கெடு முடிந்தும்கூட அந்த நாய் பிரச்சாரம் செய்ததாகவும், இதனால்தான் அந்த நாயை பிடித்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பின்னர், அந்த நாயின் ஓனர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்த கூடாது என்பது விதி. ஆனால் அதை மீறி நாயின் உரிமையாளர் நடந்து கொண்டுள்ளதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.