Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பால்தாக்ரே மட்டும் இருந்திருந்தால்.. வாயை உடைத்திருப்பார்! சிவசேனா தலைவர் மீது ஷிண்டே தாக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவின் பெண் தலைவர்களில் ஒருவரான, சாய்னா குறித்து, உத்தவ் தரப்பு தரக்குறைவாக விமர்சித்துள்ளது. இதனை கண்டித்த ஷிண்டே.. சிவசேனாவை உருவாக்கிய பால்தாக்ரே மட்டும் உயிருடன் இருந்திருந்தால், பெண் தலைவரை அவதூறாக பேசிய வாயை உடைத்திருப்பார் என்று கூறியுள்ளார்.

இந்திய அரசியலில் மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இம்மாநிலத்தில் நடக்கும் அரசியல் பிரச்னைகள் ஒட்டுமொத்த நாட்டின் அரசியலை கூட புரட்டிபோட்டுவிடும். இந்த அளவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மகாயுதி vs மகா விகாடி கூட்டணிகள் எதிர் எதிர் திசையில் நின்றிருக்கின்றன. மகாயுதியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா, அஜித் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இருக்கின்றன. மறுமுனையில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இருக்கிறது.

maharashtra assembly election 2024 maharashtra uddhav thackeray 2024

இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று இரண்டு கட்சிகளும் கடுமையாக போராடி வருகின்றன. குறிப்பாக, மகாயுதி கூட்டணிக்கு இந்த தேர்தல், தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மாகராஷ்டிராவில் பெரும்பாலான இடங்களில் மகாவிகாஸ் கூட்டணியே வெற்றிவாகை சூடியது. ஆளும் கட்சியாக உள்ள மகாயுதி கூட்டணிக்கு இந்த முடிவுகள் பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளன.

இப்படி இருக்கையில், உத்தவ் சிவசேனா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் சவாந்த், ஷிண்டே தரப்பு பெண் தலைவரான சாய்னா குறித்து அவதூறாக பேசியிருக்கிறார். இதை வைத்து உத்தவ் சிவசேனா மீது ஷிண்டே தொடர் குற்றச்சாட்டை அடுக்கி வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உத்தவ் சிவசேனா பெண்களை கேவலமாக நடத்துவதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இது உச்சத்தை எட்டியிருக்கிறது. அரவிந்த் இப்படி பேசியிருந்ததை மட்டும் பால்தாக்ரே கேட்டிருந்தால், அவரின் வாயை அடித்து உடைத்திருப்பார். எனவே பால்தாக்ரேவுக்காக தேர்தலில் உத்தவ் சிவசேனாவை நாம் தோற்கபடிப்போம்" என்று கூறியுள்ளார்.

அரவிந்தின் பேச்சு குறித்து, சாய்னா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு விளக்கமளித்த அரவிந்த், "நானும் சாய்னாவும் நீண்ட கால நண்பர்கள். அவரை அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கில் நான் எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. இந்தி மொழியில் நான் பேசிய வார்த்தைக்கு வேறு அர்த்தம் இருக்கிறது" என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விளக்கம் ஷிண்டே தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே இந்த விவகாரம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+