சுகேஷ் சந்திரசேகருடன் டேட்டிங்.. சிக்கிய பாலிவுட் நடிகை.. கைதாகிறாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
மும்பை: மருந்து நிறுவன அதிபரின் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
Recommended Video
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பில் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன.
அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்த போது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் புகார்கள் மத்திய அமலாக்கத் துறைக்கு வந்தன.

அமலாக்கத் துறை
இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூர் பங்களாக்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ 82.5 லட்சம் ரொக்கம், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திகார் சிறை
இந்த நிலையில் திகார் சிறையில் இருந்தவாறே மருந்து நிறுவன உரிமையாளரின் மனைவியிடம் அவரது கணவருக்கு ஜாமீன் பெற்று தர ரூ 200 கோடியை மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

காதலி
மேலும் அவரது காதலியும் நடிகையுமான லீனா மரியாவிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது. மேலும் பணமோசடி வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

சுகேஷ் சந்திரசேகர்
அதில் சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுடன் டேட்டிங் சென்றுள்ளதாகவும் அவருக்கு ரூ 10 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த ஹேண்ட் பேக்குகள், பெர்சியன் பூனை, கார் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் இருவருக்கும் இடையே உறவு இருப்பது தொடர்பாக அவர்களது அந்தரங்க புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

கைதாகிறாரா ஜாக்குலின்
இந்த நிலையில் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சுகேஷ் தொழிலதிபரிடம் இருந்து பணம் பறித்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகை ஜாக்குலின் குற்றவாளி என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால் ஜாக்குலின் எந்த நேரத்திலும் கைதாவார் என தெரிகிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications