"இந்தியாவில் சாதியை அழிக்க வேண்டும்.." திட்டவட்டமாக சொல்லும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சாதிகளை அகற்ற வேண்டும் எனப் பேசியுள்ளார். இந்தியர்கள் தங்கள் மனதிலிருந்து சாதியை நீக்குவதன் மூலம், ஆழமாக வேரூன்றிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உண்மையான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அடுத்த 10-12 ஆண்டுகளில் சாதி முறை முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டை முன்னிட்டு 'ஜன் சகோஷ்டி' மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மகாராஷ்டிராவில் நடைபெற்றது. இந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய சில கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. சாதியின் தோற்றம் தொடர்பாகப் பேசிய அவர், சாதிகள் முதலில் தொழில் அடிப்படையிலான பணிகளாக இருந்தவை என்றும் பின்னர் அவை சமூகப் பிளவுகளாக மாறி, பாகுபாட்டை வளர்த்தன என்றும் தெரிவித்தார்.

சாதியை அழிக்க வேண்டும்
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "இந்தப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர, முதலில் மனதிலிருந்து சாதியை அகற்ற வேண்டும். நேர்மையான, கூட்டு முயற்சி இருந்தால் 10 முதல் 12 ஆண்டுகளில் சாதியை முழுமையாக நீக்க முடியும். வெறும் சடங்குகளை விட, மன ரீதியான சீர்திருத்தம் என்பது கட்டாயம் தேவைப்படுகிறது.
பொதுமக்களின் தனிப்பட்ட குணநலன்களை வளர்ப்பதன் மூலம் சமூகத்திற்கு வலிமையூட்டி, தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம். ஆர்எஸ்எஸ் பெரிய சங்கமாக மாற எப்போதும் விரும்பியதில்லை. சமூகத்தை மேம்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும். எதிர்ப்புகளுக்கு எதிர்வினையாற்றுவதோ, போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவதோ ஆர்.எஸ்.எஸ் வேலை இல்லை.. முற்றிலும் தேசத்தை மையமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் செயல்படும்" என்றார்.
மோகன் பகவத்
மேலும், மோகன் பகவத் இந்த நிகழ்வில் ஞானிகளைப் புகழ்ந்து பேசினார். ஞானிகளை எப்போதும் உண்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்று குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே ஞானிகள் எங்குச் சென்றாலும் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "ஞானிகளுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஞானிகளின் கோரிக்கைகளைப் பிரதமர் மோடி கூட ஏற்க மறுக்க மாட்டார்" என்றார்.
ஞானிகள்
ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு நிகழ்வில் பேசிய மோகன் பகவத், இந்தியாவின் வழிகாட்டியாகத் தர்மம் இருக்கும் வரை, இந்தியா என்றென்றும் உலகின் விஸ்வகுருவாக இருக்கும் என குறிப்பிட்டார். தர்மம் என்பது தனித்துவமான ஆன்மீக ஞானம் என்பதை அவர் எடுத்துரைத்தார். மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்டு, ஞானிகளால் நிலைநிறுத்தப்பட்ட தர்மமே பிரபஞ்சத்தின் இறுதிப் பிரபவகாரணி என்றும் அவர் விளக்கினார்.
தர்மம் என்பது மதமல்ல
மோகன் பகவத் மேலும் பேசுகையில், "நரேந்திர மோடியாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, நீங்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் இயக்கும் ஒரே சக்தி ஒன்றுதான். அந்தச் சக்தியால் வாகனம் ஓட்டப்பட்டால், ஒருபோதும் விபத்து ஏற்படாது. அதுதான் தர்மம். தர்மம் என்பது வெறும் மதமல்ல. அதுதான் ஒழுக்கம்.. தர்மமே முழுப் பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்தி. எல்லாமே அந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.
தர்மம் என்பது ஒவ்வொரு உயிரினத்திலும் பரவியுள்ளது.. நீர் பாய்வது தர்மம், நெருப்பு எரிவது தர்மம். மதச்சார்பற்ற அரசுகள் இருந்தாலும், எந்த மனிதனும் அல்லது படைப்பும் தர்மத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது" என்றார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது? -
2005ல் பல்லாவரம் ரேடியல் சாலையில் 10 லட்சத்திற்கு இடம் வாங்கியிருந்தால் இன்று என்ன விலை தெரியுமா? -
பலரின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்.. போச்சு விஜய் தவெகவிற்கு இருக்கும்... பெரிய சிக்கலே இதுதான்! -
நேரம் பார்த்து அடிக்கும் சவுதி அரேபியா.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அச்சம்? -
அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்












Click it and Unblock the Notifications