ஆ.. நமீதாவை பாருங்க.. குழந்தையுடன் படக்குனு சபைக்குள்ளயே வந்துட்டாரு.. அப்படியே மலைத்து பார்த்த ஜனம்
பாஜக எம்எல்ஏ நமீதா தன்னுடைய 2 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு வந்திருந்தார்
மும்பை: பாஜக எம்எல்ஏ நமீதா, தன்னுடைய 2 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு வந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார்.. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் ஷேர் ஆகி வருகின்றன.
இளம் அரசியல்வாதிகள் அதிகரித்து வரும்நிலையில், அதில் இளம்பெண்களின் அரசியல் பங்களிப்பும் அதிகமாகி கொண்டே வருவது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடைபெற்றது.. குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக மாநிலத்தின் 2வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் நடைபெறுவது வழக்கம்.

ஹேப்பி குழந்தை
ஆனால், கடந்த 2 வருடங்களாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாமலேயே இருந்தது. பின்னர் கடந்த வருட இறுதியில் தொற்று பரவல் குறைந்ததையடுத்து, குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெற்றது. அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில், தியோலாலி தொகுதி பெண் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அகிரே, தன்னுடைய இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வந்திருந்தார்.. கைக்குழந்தையுடன் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்றதை பலரும் வியந்து பார்த்தனர்.. இதுகுறித்து எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் சொன்ன விளக்கம் தொகுதி மக்களிடம் பெருத்த வரவேற்பை பெற்று தந்திருந்தது.

தாய்மை
ஆஹிர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் ஒரு தாய்... மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை வருடங்களாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை. நான் இப்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது. அந்த கேள்விகளுக்கு பதில்களையும் பெற வேண்டி உள்ளது.. அதனாலேயே நான் இன்று அவைக்கு வந்துள்ளேன்" என்று கூறி, அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியிருந்தார்.

வெள்ளை துணி
இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ நமீதா முன்டாடா, தன்னுடைய 2 மாத குழந்தையுடன் சட்டசபைக்கு இன்று வருகை தந்திருந்தார்.. மகாராஷ்டிராவில் பட்ஜெட் கூட்டத் தொடரில் குழந்தையுடன் பாஜக எம்.எல்ஏ பங்கேற்றது பேசுப்பொருளாகியுள்ளது. தன்னுடைய 2 மாத குழந்தை லெக்கியுடன் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் நமீதா இன்று பங்கேற்றார்.. அது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்களை அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்து, மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். குழந்தையை ஒரு வெள்ளை துணியில் போர்த்தி, இரு கைகளாலும் நெஞ்சோடு அணைத்தபடி அவைக்குள் நுழைந்தார் நமீதா..

ஹிர்கானி அறை
மராட்டிய சட்டசபையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பதற்காக 'ஹிர்கானி அறை' என்ற தனி ரூம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. எனவே, குழந்தைகளை தூக்கி வரும் இளம் தாய்மார்களுக்கு இந்த அறை பேருதவியாகவும் திகழ்ந்து வருவதாக சொல்கிறார்கள்.. நமீதா சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்ததை, அங்கிருந்தவர்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர்.. சில பெண்கள், நமீதாவிடம் நெருங்கி சென்று குழந்தையை கொஞ்சியதுடன், நலம் விசாரித்துவிட்டும் சென்றனர்... இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications