மும்பை ஓஎன்ஜிசியில் பயங்கர தீவிபத்து.. 5 பேர் பலி.. 11 பேர் படுகாயம்
Recommended Video
மும்பை: நவி மும்பையில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பயங்கர தீவிபத்தை அடுத்து 5 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
நவி மும்பையில் யூரானில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஓஎன்ஜிசி அலுவலகத்தில் உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஓஎன்ஜிசி, துரோனகிரி, ஜேஎன்பிடி, பான்வெர், நேரூல் ஆகிய இடங்களிலிருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 2 கி.மீ. தூரத்தை யூரான் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்தில் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 5 பேர் பலியாகிவிட்டனர். 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பசிக்குது.. சோறு போடும்மா.. கெஞ்சிய கணவர்.. அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி
இந்த தீவிபத்தால் குஜராத்தில் உள்ள ஹாஜீரா ஆலைக்கு எரிவாயு திருப்பிவிடப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை.