புதிய இன்னிங்சை தொடங்கும் சச்சின் டெண்டுல்கர்.. தேர்தல் ஆணையம் கொடுத்த பெரிய பொறுப்பு
மும்பை: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளம் என்ற டைட்டில் கொடுத்து சச்சின் டெண்டுல்கருக்கு தேர்தல் ஆணையம் பெரும் பொறுப்பை வழங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு புதிய பொறுப்பு கிடைத்து இருக்கிறது. அதாவது, தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கரை தேசிய அடையாளமாக (National Icon) தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் விளம்பரங்கள் மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள சச்சின் டெண்டுல்கர் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இடையே நாளை கையெழுத்து ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications