உச்சக்கட்ட அதிர்ச்சி.. மொத்தம் 8 பேர்.. ஓடும் ரயிலில் பெண் பலாத்காரம்.. கொள்ளை.. மும்பையில் பரபரப்பு
8 பேர் கொண்ட கும்பல், பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்
மும்பை: ஓடும் ரயிலில் 8 பேரும் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கிறது.. பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த குற்றங்கள் பேருந்து, ரயில் நிலையங்களிலும் பெருக ஆரம்பித்துள்ளது.. ஏற்கனவே ரயில்களில் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல் அதிகமானதால், ரயில்வே பாதுகாப்பை அதிகரித்து, ரயில்வே அமைச்சகமும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டது.

மும்பை
இதனால் ஓரளவு குற்ற செயல்கள் தடுக்கப்பட்டாலும், முற்றிலும் நீங்கவில்லை.. இன்றும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.. ரயிலில் ஏறிய ஒரு கும்பல் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளது.. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது மகாராஷ்டிர மாநிலம் இகாத்புரி என்ற ஸ்டேஷனில், 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஏறியது..

மிரட்டல்
அவர்கள் கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.. ரயிலின் ஏசி கோச்சில் அந்த கும்பல் ஏறி கொண்டது... பிறகு அங்கிருந்த பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடித்து கொண்டது.. இறுதியில் அந்த ரயிலில் பயணம் செய்த ஒரு பெண்ணை 8 பேருமே சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்..

பயணிகள்
அந்த பெண்ணுக்கு 30 வயதிருக்கும் என்கிறார்கள்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் இதனை தடுக்க வந்துள்ளனர்.. ஆனால், அந்த கும்பல், பயணிகளையும் கத்தியை காட்டி மிரட்டியதுடன், சிலரை வெட்டி காயப்படுத்தவும் செய்தது.. இதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.. அதற்குள் கசரா என்ற ஸ்டேஷன் வந்துவிடவும், அந்த கோச்சில் இருந்த பயணிகள் கத்தி கூச்சல் போட்டு காப்பாத்துங்க என்று சத்தம் போட்டனர்..

போலீசார்
இதனைக் கேட்டு அங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, கொள்ளை கும்பலில் 4 பேரை கைது செய்தனர்.. மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.. கைதான 4 பேரிடமிருந்து 34,000 ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.. இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications