8 மரபணுவில் 39 உருமாற்றம்...மும்பை மருத்துவர்களுக்கு மீண்டும் கடுமையான கொரோனா தொற்று!!
மும்பை: மரபணு மாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் மும்பையில் நான்கு சுகாதாரப் பணியாளர்களை இரண்டாவது முறை பாதித்து இருப்பது தெரிய வந்துள்ளது. முதல் முறை ஏற்பட்ட பாதிப்பை விட இரண்டாவது முறை ஏற்பட்ட வைரஸ் தொற்று பாதிப்பு கடுமையாக இருந்ததாக லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சியின் கீழ் வரும் பிஎம்சி மருத்துவமனையில் பனியாற்றி வரும் மூன்று மருத்துவர்கள் மற்றும் இந்துஜா மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு சுகாதாரப் பணியாளர் என்று நான்கு பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மரபணு
இந்த நான்கு பேருக்கும் முதலில் ஏற்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இல்லை. ஆனால், மரபணு மாற்றம் செய்து கொண்டு இரண்டாவது முறை பாதித்த வைரஸ் தாக்கம் கடுமையாக இருத்தாக கண்டறியப்பட்டுள்ளது.

தொற்று
இதற்கான ஆய்வை ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜி, ஜெனிடிக் இஞ்சினியரிங் அண்ட் பயோடெக்னாலஜி சர்வதேச மையம் ஆகியவை மேற்கொண்டு இருந்தன. இந்த ஆய்வில் 8 மரபணுக்களில் 39 உருமாற்றம் அல்லது பிறழ்வுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. முதல் மாதிரியில் இருந்து நான்கு தொற்றுகளும், இரண்டாம் மாதிரியில் இருந்து நான்கு தொற்றுகளும் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிக நாட்கள்
இந்த ஆய்வு குறித்து மருத்துவர்கள் சுஜாதா சுனில் மற்றும் ஜெயந்தி சாஸ்திரி இருவரும் எழுதியுள்ளனர். அதில், ''நான்கு சுகாதாரப் பணியாளர்களுக்கும் இரண்டாவது முறை ஏற்பட்ட தொற்றின் வீரியம் அதிகமாக இருந்தது. முதல் முறை ஏற்பட்ட தொற்று காலத்தையும் விட அதிக நாட்கள் உடலில் நீடித்து இருந்தது.

வைரஸ்
சுகாதாரத் துறையில் முன்னணியில் இருந்து முக்கியப் பணியாற்றுபவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவது தவிர்க்க முடியாதது. வைரஸ்களை தனியாக பிரித்து ஆய்வு செய்வதன் மூலமே மரபணு வரிசைகளை உறுதிபடுத்த முடியும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

நுரையீரல்
மருத்துவர் சுஜாதா சுனில் தெரிவித்து இருக்கும் தகவலில், ''இவர்களில் யாருக்கும் மூச்சுத் திணறல் அல்லது நுரையீரலில் தொற்று ஏற்படவில்லை. இதற்குக் காரணம் அவர்களது சிறிய வயது காரணமாக இருக்கலாம். தொடர்ந்து தொற்று ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தலாம். வயதானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாங்காங்
கொரோனா தொற்று பாதித்தவர்களையே மீண்டும் பாதிக்கிறது என்ற செய்தி உலகம் முழுவதிலும் இருந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் மரபணு மாற்றம் என்று கூறப்படுகிறது. முதலில் ஹாங்காங்கில் தான் மீண்டும் தொற்று ஏற்பட்டு இருந்தது. மீண்டும் வரும்போது மரபணுவைப் பொருத்து வைரஸின் வீரியமும் மாறுபடுகிறது என்று மருத்துவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தனர். இன்னும் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வில் முழுமையான முடிவுக்கு மருத்துவர்களால் வர முடியவில்லை. இதற்குக் காரணம் மரபணு மாற்றம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications