அடுத்தடுத்து மும்பை கடலில் வரப்போகுது ராட்சத அலைகள்.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்
Recommended Video
மும்பை: மும்பை கடற்கரையில் 3.76 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளதால், பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.
மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்கிறது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது போதாது என்று, கடலில் ராட்சத அலை எழும்பும் என்று, மும்பை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடற்கரைக்கு போக வேண்டாம் என மீட்பு படையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
காலை 10.44 மணிக்கு, மும்பை கடற்கரையில் 3.76 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 10 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.
இதன்பிறகு 11.23 மணியளவில் அடுத்த ராட்சத அலை எழும். இப்படி அடுத்த சில நாட்களுக்கு ராட்சத அலைகள் எழும்.
மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளான மால்வன் முதல் வசாய் வரை புதன்கிழமை இரவு 11.30 மணி வரை, ராட்சத அலைகள் அவ்வப்போது எழும்பும் வாய்ப்பு இருப்பதாக, கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களில் மும்பை மற்றும் மும்பை பெருநகரப் பகுதியில் கனமழை முதல், மிக அதிக மழை பெய்யும் என்று மும்பை ஆணையர் இன்று அறிவிப்பு ஒன்றில், கூறினார், வானிலை அப்டேட்டுகளை கவனித்து அதற்கேற்ப திட்டமிடுமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications