"பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி".. "இந்தியா" கூட்டணிக்கு காங்கிரஸ் முழக்கமே சவக் குழி? பாஜக ஹேப்பி!
மும்பை: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், ஜேடியூ கட்சிகள் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்திருக்கிறது. இதனால் லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணி ஒற்றுமையாக எதிர்கொள்ளுமா? என்ற கேள்வியை இயல்பாகவே காங்கிரஸ், ஜேடியூ கட்சிகள் உருவாக்கி வருகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது கருத்து கணிப்புகள் முடிவுகள். என்னதான் 26 கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி இருந்தாலும் அதிகபட்சம் 150, 160 தொகுதிகளைத்தான் அந்த அணி கைப்பற்ற முடியும் என கருத்து கணிப்புகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

மும்பை கூட்டம்: "இந்தியா" கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வரும் 31, செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. மும்பை கூட்டத்தில் மேலும் பல கட்சிகள் "இந்தியா" கூட்டணியில் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது. மும்பை கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், பிரதமர் வேட்பாளர், குறைந்தபட்ச செயல்திட்டம், தொகுதிப் பங்கீடு ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் முழக்கம்: இதனிடையே "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ராகுல் காந்திதான் என்பதில் உறுதியாக உள்ளது. "இந்தியா" கூட்டணி உருவாவதற்கு முன்னர் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்றே அக்கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
காங்கிரஸுக்கு ஜேடியூ பதிலடி: தற்போது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோரும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மும்பையில் "இந்தியா" கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வரும் இந்த கருத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. உ.பி, பீகார், சத்தீஸ்கர் மாநில மக்கள், நிதிஷ்குமாரையே பிரதமராக்க விரும்புகின்றனர் என்கிறார் பீகார் அமைச்சர் ஸ்வரண் குமார். மேலும் நேரு, விபிசிங் வெற்றி பெற்ற பூல்பூர் லோக்சபா தொகுதியில் நிதிஷ்குமார் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மும்பை கூட்டத்தில் மோதல் வரும்?: மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதம் நடைபெற்றால் கட்சிகளிடையே பெரும் மோதல் வெடிக்கும் என்பதையே இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. "இந்தியா" கூட்டணி ஒற்றுமையாக தேர்தலை சந்திக்காது என்ற தங்களது ஆரூடம் எப்படியும் பலித்துவிடும் என்கிற கனவில் இருக்கிறதாம் பாஜக.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ்












Click it and Unblock the Notifications