Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்கிடாக்கியில் வந்த சத்தம்.. கஞ்சா சுற்றி தந்தேன்.. சுஷாந்த் மரணம்.. வேலைக்காரர் பகீர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணம் குறித்து அவரின் வீட்டு வேலைக்காரர் நீரஜ் சிங் கொடுத்த வாக்குமூலம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Sushant Singh & Sara Ali Khan Relationship Break Up • Samuel Haokip

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, யாரவது அவரை தற்கொலை செய்ய தூண்டினார்களா, அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

    இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளது . கடந்த ஜூன் 14ம் தேதி தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் நண்பர்களுடன் பார்டி கொண்டாடியவர், மறுநாளே இரவோடு இரவாக தற்கொலை செய்து கொண்டார்.

    வேலைக்காரர் பேட்டி

    வேலைக்காரர் பேட்டி

    இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மர்ம மரணம் குறித்து அவரின் வீட்டு வேலைக்காரர் நீரஜ் சிங் முக்கியமான சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார். சுஷாந்த் சிங் இறக்கும் முன் இரண்டு நாட்கள் என்ன நடந்தது என்று தெரிவித்துள்ளார். அதில் சுஷாந்த் சிங் எப்போதும் தனது அறை கதவை சாத்தவே மாட்டார். எப்போதும் இரவு நேரத்தில் தண்ணீர் குடிக்க கூப்பிடுவார்.

    வாக்கி டாக்கி

    வாக்கி டாக்கி

    பின் ஒருநாள் எங்களுக்கு அவர் வாக்கி டாக்கி வாங்கி கொடுத்தார். இனிமேல் எது பேச வேண்டும் என்றாலும் வாக்கி டாக்கி மூலம் பேசுங்கள் என்று கூறினார். நாங்களும் வீட்டு வேலை உத்தரவுகளை வாக்கி டாக்கி மூலம் பேசினோம். அப்படித்தான் ஒருநாள் திகில் சம்பவம் ஒன்று நடந்தது. நான் தோட்டத்தில் காவலுக்கு நின்றேன். வாக்கி டாக்கியில் பேசிய சுஷாந்த் சிங் என்னிடம், அவரின் அறை லைட்டை அணைக்க வேண்டும் என்று கூறினார்.

    அச்சம் வந்தது

    அச்சம் வந்தது

    வாக்கி டாக்கியில் அவர் சொன்னதை கேட்டு அவரின் அறைக்கு சென்றேன். ஆனால் அங்கு சுஷாந்த் சிங் தூங்கி கொண்டு இருந்தார். லைட்டும் அணைந்து இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. மறுநாளும் இதேபோல் ஒரு குரல் என்னிடம் விளக்கை அணைக்கும்படி சொன்னது. அதேபோல் அன்றும் விளக்கு அவரின் அறையில் அணைந்தே இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

     பெறிய சந்தேகம்

    பெறிய சந்தேகம்

    என்னிடம் யார் அப்படி பேசியது என்று சந்தேகம் எழுந்தது. அன்று இரவு முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை. அதன்பின் ஜூன் 12ம் தேதி சுஷாந்த் சிங் பெட்டி நிறைய கஞ்சா வாங்கி வந்தார். என்னிடம் அதை சுற்றி தரும்படி கூறினார். நான் அதை சிகரெட்டில் சுற்றி அவருக்கு கொடுத்தேன். பெட்டியில் நிறைய கஞ்சா இருந்தது.அதன்பின் 13ம் தேதி அவர் கஞ்சா அடிக்கவில்லை.

    சந்தேக மரணம்

    சந்தேக மரணம்

    அதன்பின் 14ம் தேதி எழுந்து காலையில் என்னை பார்த்து சிரித்தார். அதன்பின் ஜூஸ் குடித்தார். பின் அறைக்கு உள்ளே சென்றவர், வெளியே வரவில்லை. 11 மணி தாண்டியும் அவர் வெளியே வரவில்லை. சந்தேகம் வந்து, அதன்பின் போலீஸ் வந்து பூட்டை உடைத்தது. உள்ளே அவர் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார். அவரின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.

    காரணம் தெரியவில்லை

    காரணம் தெரியவில்லை

    அன்று காலை எங்களிடம் அவர் நன்றாக பேசினார். அந்த கஞ்சா பெட்டி அவர் இறந்த அன்று காலியாக இருந்தது. ஒரே இரவில் யாரும் இவ்வளவு கஞ்சா அடிக்க முடியாது. அந்த பெட்டியில் இருந்த கஞ்சா எங்கே சென்றது என்று தெரியவில்லை. இது இன்னும் மர்மமாக இருக்கிறது. அன்று வாக்கி டாக்கியில் பேசியதும் யார் என்று தெரியவில்லை என்று, சுஷாந்த் சிங் வீட்டு வேலைக்காரர் நீரஜ் சிங் கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+