அதிகரிக்கும் கொரோனா.. இந்தியா உள்பட உலக நாடுகளில் மொத்தம் 57.75 கோடி பேர் பாதிப்பு
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினமும் அதிகரித்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 575,705,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூகானில் 2019ல் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. அங்கிருந்து பல நாடுகளும் இந்த வைரஸ் பரவியது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் பாதிப்பை சந்தித்தது.

கொரோனா பாதிப்புக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. 3 அலைகளாக கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கி ஏராளமானவர்களை கொன்று குவித்துள்ளது.
இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்த துவங்கியது. மேலும் கொரோனா தடுப்பூசி ஆய்வுகளும் துவங்கியது. இதையடுத்து தான் கொரோனா பாதிப்பு குறைய துவங்கியது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தாக்க துவங்கியது. கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை.
இதற்கிடையே தான் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவல் என்பது குறைந்துள்ளது. இருப்பினும் முடிவு பெறவில்லை.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 575,705,016 பேர் பாதிக்கப்பட்டுள்னளர். தற்போது 23,579,657 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் 41,263 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,404,607 ஆகவும், உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 545,720,752 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications