மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு சக்சஸ்.. ‛இந்தியா’ கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள்? முழு விபரம்
மும்பை: மகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்கு பிறகு ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தி எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் ‛இந்தியா' கூட்டணியில் சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் அணி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளன.

இந்த 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் வெற்றிகரமாக தொகுதி பங்கீடு நடந்து முடிந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 21 இடங்களில் சிவசேனா உத்தவ் அணி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதேபோல் மீதமுள்ள 10 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி போட்டியிடுகிறது.
மகாராஷ்டிரா என்பது முக்கிய மாநிலமாக உள்ளது. இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா தான் உள்ளது. இங்கு ‛இந்தியா' கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டால் அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும். இத்தகைய சூழலில் தான் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணியினர் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் மொத்தம் 5 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 19, ஏப்ரல் 16, மே 7, மே 13, மே 20 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications