"பிக்ஸிங் பண்ணிட்டாங்கனு ஒரே அழுகை".. கதிகலங்க வைத்த "மும்பை பால்டன்ஸ்".. வைரலாகும் மீம்ஸ்!
மும்பை: 2021 ஐபிஎல் தொடரில் மும்பை அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது. மும்பை அணி வெளியேறுவது நேற்றே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
நேற்றே கொல்கத்தா அணி வெற்றிபெற்றதால் இன்று மும்பை அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேபோல் இன்று மும்பை அணியும் அதிரடியாக ஆடி 20 ஓவரில் 235 ரன்கள் எடுத்தது. இதனால் எங்கே மும்பை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் ஹைதராபாத் அணியோ விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை எளிதாக கடந்தது. இதனால் கணக்குப்படி மும்பை அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியாது.

வெளியேறியது
இதனால் மும்பை அணி இந்த தொடரில் இருந்து இன்று அதிகாரபூர்வமாக வெளியேறியது. மும்பை இன்று வெளியேறி இருந்தாலும் நேற்றில் இருந்தே மும்பை அணிக்கு எதிராக கடுமையான மீம்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு சாம்பியன் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலையை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். நேற்றில் இருந்தே பலரும் இணையத்தில் மீம் போட்டு மும்பை அணியை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

மும்பை பேட்டிங்
மும்பை அணி இன்று போராடிதான் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இன்றைய போட்டியில் வென்றாலும் கூட மும்பை அணிக்கு ப்ளே செல்லும் வாய்ப்பு கிடைக்காது. இதை மையமாக வைத்து பல மீம்ஸ்கள் இணையத்தில் போடப்பட்டுள்ளது. முக்கியமாக சரியாக பவுலிங்கும் செய்யாமல், பேட்டிங்கும் செய்யாமல் தொடர்ந்து சொதப்பி வந்த குர்ணால் பாண்டியா போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததை பலர் விமர்சனம் செய்து இருந்தனர்.

மீம்ஸ்
மும்பை எப்படி எல்லாம் ப்ளே ஆப் உள்ளே வர முடியும் என்பதை வைத்தும் நிறைய மீம்ஸ் போடப்பட்டது. இப்ப கூட ப்ளே ஆப் உள்ள நீங்க வர சான்ஸ் இருக்கு.. எப்டிடா... ஆடியன்ஸா வேணா வரலாம் என்ற இந்த மீம் ட்வீட்டரில் வைரலானது.

டாட்டா
சிஎஸ்கே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் அணிகள் ப்ளே செல்வதை வைத்து பலர் மீம்ஸ் வெளியிட்டு உள்ளனர். இந்த நான்கு அணிகள் சேர்த்து மும்பை அணிக்கு சோகமாக டாட்டா காட்டுவது போல வெளியான இந்த மீம் வைரலாகி உள்ளது.

170 ரன்கள்
இன்றைய போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றிபெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் பலர் டி 20 போட்டியில் 300 ரன் அடிப்பது எப்படி, 400 ரன் அடிப்பது எப்படி என்று பல மீம்களை வெளியிட்டு வந்தனர்.

மும்பை
இன்று மும்பை அணி எளிதாக 235 ரன்கள் எடுத்த போது அதை பலரும் பிக்சிங் என்றும் இணையத்தில் விமர்சனம் செய்தனர். காசு கைமாறிவிட்டது. மும்பை அணி ப்ளே ஆப் செல்ல போகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் மும்பை அணி ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இதை வைத்தும் நிறைய மீம்ஸ் போடப்பட்டது.

பிக்சிங்
இந்த பிக்சிங் தொடர்பாக பலர் இணையத்தில் இன்று மீம் போட்டு கடைசியில் ஏமாந்து போனது குறிப்பிடத்தக்கது. First Innings முடிஞ்சதும் அம்பானி பிக்ஸிங் பண்ணிட்டானு ஒரே அழுக
அப்புறம் SRH 65 அடிச்சதும் தான் அமைதி ஆனானுக Maakkaans, என்று சிஎஸ்கே அணியை கிண்டல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications