மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேர் ஸ்டைலிஸ்ட் பேச்சை கேட்காத நடிகை ஜாக்குலின் .. ஆதாரத்தை அழிப்பதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

மும்பை: சுகேஷ் சந்திரசேகருடனான உறவை மறைக்கும் வகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆதாரங்களை அழித்து வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த மருந்து நிறுவனரி மனைவியிடம் ரூ 200 கோடியை மோசடியாக பெற்றதாக பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

அவருடைய மனைவி லீனா மரிய பாலுக்கும் இந்த மோசடியில் பங்கிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுகேஷுடன் தொடர்பில் இருந்ததாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸிடம் அமலாக்கத் துறை விசாரித்தது.

சிக்கலை கொடுத்த “சி.வி.”.. தேனிக்கு எதிராக “கலவர” நிலவரம்.. ஓபிஎஸ் உட்பட 200 பேர் சிபிசிஐடி வழக்கு சிக்கலை கொடுத்த “சி.வி.”.. தேனிக்கு எதிராக “கலவர” நிலவரம்.. ஓபிஎஸ் உட்பட 200 பேர் சிபிசிஐடி வழக்கு

சுகேஷுடன் ஜாக்குலின்

சுகேஷுடன் ஜாக்குலின்

அப்போது சுகேஷுடன் ஜாக்குலின் டேட்டிங் போனதும் அவரிடம் இருந்து மோசடி செய்த பணத்தில் பரிசுப் பொருட்களை ஜாக்குலின் பெற்றதாகவும் தெரிகிறது. மேலும் ஜாக்குலினும் சுகேஷும் எடுத்த அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகரின் குற்ற பின்னணி குறித்து தெரிந்தே அவருடன் ஜாக்குலின் பழகியதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை தாக்கல்

அமலாக்கத் துறை தாக்கல்

அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த குற்ற பத்திரிகையில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: சுகேஷின் கடந்த கால குற்றங்கள் அனைத்தும் ஜாக்குலினுக்கு தெரியும். லீனா மரியபால் சுகேஷின் மனைவி என தெரிந்தும் சுகேஷுடன் தொடர்பில் இருந்துள்ளார். சுகேஷின் மோசடிகள் குறித்து ஜாக்குலின் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஷான் கூறியும் ஜாக்குலின் அதை கண்டுக் கொள்ளாமல் உறவை வளர்த்து கொண்டே வந்தார்.

ஜாக்குலின்

ஜாக்குலின்

ஜாக்குலின் மட்டுமல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் கூட சுகேஷிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். எல்லாமே மோசடி செய்த பணம்தான். சுகேஷிடம் இருந்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 5 கைக்கடிகாரம், 20 நகைகள், 47 ஆடைகள், 32 பேக்குகள், 4 ஹெர்ம்ஸ் பேக்குகள், 9 ஓவியங்கள், ஒரு வெர்சேஸ் கிராச்சரி செட் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

ரூ 7 கோடி பரிசு

ரூ 7 கோடி பரிசு

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாக்குலினின் பெற்றோருக்கு சுகேஷ் இரு கார்களை பரிசளித்துள்ளார். அத்துடன் ஜாக்குலின் ரூ 7 கோடியும் அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரி ரூ 1.26 கோடியும் ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரன் ரூ 15 லட்சத்தையும் சுகேஷிடம் இருந்து பெற்றனர்.

ஆதாரங்களை அழிக்கும் முயற்சி

ஆதாரங்களை அழிக்கும் முயற்சி

எனினும் விசாரணையில் தனக்கு ஒன்றும் தெரியாது என்றே ஜாக்குலின் கூறி வந்தார். சுகேஷ் தன்னை ஏமாற்றிவிட்டார் என கூறிய ஜாக்குலின் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. விசாரணையில் இருந்து தப்பிக்கவே பொய்யை ஜாக்குலி் கூறியுளளார். மேலும் சுகேஷுடனான பழக்கத்தை மறைக்க ஜாக்குலின் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனது செல்போனில் இருந்த தகவல்கள், அவரது ஊழியர்களின் செல்போனில் இருந்த சுகேஷ் தொடர்பான தகவல்களையும் மறைத்துள்ளார் என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Bollywood actress Jacqueline Fernandes is trying to tamper the evidences.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X