Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்சர் அடிக்கும் "இந்தியா" கூட்டணி.. மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு அதிர்ச்சி தோல்வி.. லோக்போல் சர்வே

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலை குறித்து லோக்போல் அமைப்பு எடுத்த சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் பாஜகவுக்கு அங்கு அதிர்ச்சி தோல்வி காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

நமது நாட்டில் சமீபத்தில் தான் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது, அடுத்து இந்த மாதம் ஹரியானா, காஷ்மீர் மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. விரைவில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா தேர்தலும் நடக்க உள்ளது.

maharashtra assembly election 2024 maharashtra 2024

மகாராஷ்டிரா: இதற்கிடையே மகாராஷ்டிர தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 145 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு இப்போது பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது.

எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும்: இதற்கிடையே மகாராஷ்டிராவில் இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று லோக்போல் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ்- சரத் பவார் என்சிபி- தாக்ரே சிவசேனா கூட்டணி 141 முதல் 154 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 115 முதல் 128 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் அங்கு 5 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக லோக்போல் அமைப்பின் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு சதவிகிதம்: அதேபோல வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் கூட்டணி 41% முதல் 44% வரையிலான வாக்குகளைப் பெறும் என்றும் என்டிஏ கூட்டணி 38-41% வரையிலான வாக்குகளைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் சுயேச்சைகள் எல்லாம் சேர்ந்து 15- 18% வாக்குகளைப் பெறும் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை நடந்தது என்ன: மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்குக் கடந்த 2014 முதல் என்டிஏ கூட்டணியே ஆட்சியில் இருந்தது. 2019 தேர்தலுக்குப் பிறகு பாஜக- சிவசேனா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இந்த கூட்டணி முறிந்தது. அப்போது தான் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் இணைந்து ஆட்சியைப் பிடித்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார். இருப்பினும், அந்த ஆட்சி 2.5 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக சிவசேனாவின் ஷிண்டே கலகம் செய்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்று அவர் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். இதனால் சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார். அதற்கு மறு ஆண்டே என்சிபி கட்சியிலும் சரத் பவாருக்கு எதிராகக் கலகம் செய்துவிட்டு அஜித் பவார் வந்து பாஜக கூட்டணியில் ஐக்கியமானது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் முடிவுகள்: கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் அங்கு எதிர்க்கட்சிகளுக்கே அதிக சீட் கிடைத்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 30 தொகுதிகளை இந்தியா கூட்டணி வென்றது. காங்கிரஸ் 13 இடங்களிலும், தாக்ரே சிவசேனா 9 இடங்களிலும், சரத் பவார் என்சிபி 8 இடங்களிலும் வென்று இருந்தது.

அதேநேரம் அங்கு என்டிஏ கூட்டணியால் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. குறிப்பாக பாஜக அங்கு ஒற்றை இலக்கில் வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஷிண்டே சிவசேனா 7 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி ஒரே ஒரு இடத்தல் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+